Followers

Monday, July 28, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர்கள் என்னிடம் பேசும்பொழுது நீங்கள் எப்பொழுதும் பிஸியாகவே இருப்பீர்களா என்று கேட்பார்கள். எப்பொழுதும் நான் சும்மா இருப்பதை தான் விரும்புவேன். எனக்கு வாடிக்கையாளர்களும் குறைவு தான். ஏன் என்றால் நான் வாடிக்கையாளர்களை அதிகம் சந்திக்க விரும்புவதில்லை.

என்னிடம் உள்ள பழக்கம் தனிமையாக இருப்பதை அதிகம் விரும்புவேன். எனது குரு கூட இதனை தான் சொல்லுவார். ஊரில் உள்ளவற்றை எல்லாம் இழுத்து போட்டு செய்துக்கொண்டு இருக்காதே என்பார். தனியாக உன்னுடைய வேலை மட்டும் பார் என்பார். 

தனிமையாக இருக்கும்பொழுது மட்டுமே நிறைய விசயங்களை கண்டுபிடிக்க முடியும். அதனால் நான் தனிமையில் சில விசங்களை தேடிக்கொண்டு இருப்பேன். சும்மா அமர்ந்துக்கொண்டு இருப்பது தான் எனது வேலை. எனக்கு பொய் பேச தெரியாது. அதனால் உங்களிடம் சொல்லிவிட்டேன். அதற்க்காக தனிமையாக இருப்பார் என்று போனை போட்டு தொந்தரவு செய்யவேண்டாம்.

எங்களின் குறிக்கோள் நடைபெறுவதற்க்கு தனிமையில் இருந்து செய்துக்கொண்டிருப்போம். ஒரு சாதாரண சோதிடர் போல் நான் வேலை பளு அதிகம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கமாட்டேன். இது எதனால் என்றால் தனிமையில் இருக்கும்பொழுது சக்தி அதிகரிக்கும். அடுத்த வேலைக்கு அந்த சக்தியை பயன்படுத்தி விரைவாக வேலையை முடிப்பதற்க்கு இதனை செய்வது வழக்கம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: