Followers

Tuesday, July 15, 2014

பச்சை பரப்புதல்


வணக்கம் நண்பர்களே!
                    உங்களின் குலதெய்வத்திற்க்கான பச்சைப்பரப்புதலை செய்து வருகிறீர்களா? இதனை எழுதி நீண்ட நாட்கள் ஆகின்றது அதனால் சொல்லுகிறேன். மறக்காமல் செய்துக்கொண்டு வாருங்கள். தொடர்ந்து செய்யும்பொழுது மட்டுமே குலதெய்வத்தின் பலனை நாம் அனுபவிக்கமுடியும்.

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யும்பொழுது அது இயற்கையாகவே வெற்றியை நோக்கி தான் செல்லும். உங்களின் குலதெய்வம் வரவில்லை என்று கவலைப்படவேண்டியதில்லை. நீங்கள் செய்யும்பொழுது அதுவே மனமிரங்கி வந்துவிடும்.

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் குலதெய்வத்திற்க்கு செய்யும் பச்சைப்பரப்புதலை மட்டும் நிறுத்தாதீர்கள். தொடர்ந்து செய்துக்கொண்டு வாருங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் நான் இப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டை எனது குலதெய்வத்திற்க்கு செய்து வருகிறேன். நீங்கள் வேண்டுமானால் இப்படிப்பட்ட வழிப்பாட்டை உங்களின் குலதெய்வத்திற்க்கும் செய்யலாம் என்று சொல்லுங்கள். அவர்கள் விருப்பபட்டு கேட்டால் நீங்கள் அவரிடம் விளக்கி சொல்லி செய்ய சொல்லுங்கள்.

பச்சைப்பரப்புதலை முடிந்தளவு நான் எனது நண்பர்களிடம் மற்றும் எனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வருகிறேன். ஜாதககதம்பத்தின் வழியாக ஒரு நண்பர் எனக்கு கிடைத்தார். அவர் என்னிடம் ஒரு லட்சம் பேருக்காவது இதனை என் வாழ்நாளில் பரப்பிவிடுவேன் என்று சொன்னார். அதனை கேட்டு எனக்கு சந்தோஷமாக இருந்தது. நமது மக்களை காப்பாற்ற இவர் நினைக்கும் இந்த செயல் தடையின்றி நடைபெற அம்மனிடம் நான் பிராத்தனை வைத்தேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: