Followers

Friday, July 11, 2014

பணம் வரும் வழி


வணக்கம் நண்பர்களே!
                    சென்னையில் நல்ல மழை பெய்கிறது. எனக்கு பிடித்த குளிர்ச்சியை இயற்கை கொடுக்கிறது. அப்படியே உங்களுக்கும் ஒரு பதிவை கொடுத்துவிடலாம் என்று எழுதுகிறேன்.

இன்றைய காலத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பணம். அனைவரும் அதனை நோக்கி தான் சென்றுக்கொண்டு இருக்கின்றனர். ஒருவருக்கு பணம் நன்றாக வரவேண்டும் என்றால் முதலில் அவர்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீடு நன்றாக இருக்கவேண்டும். 

இரண்டாவது வீட்டு அதிபதி மறைவிடங்களுக்கு செல்லகூடாது. மறைவிட அதிபர்களோடு கூட்டணி சேரக்கூடாது. அப்படி கூட்டணி அமைத்தால் அவர்களுக்கு பணம் திண்டாட்டம் வந்துவிடும்.

ஒருவருக்கு இரண்டாவது வீட்டில் பாவக்கிரகங்கள் இருந்து அதற்கு சுபக்கிரகங்களின் பார்வை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஜாதகர் பிறரால் மோசடி செய்யபடுவார்.

எல்லாம் இருக்கட்டும் பணம் வருவதற்க்கு வழியை சொல்லுங்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சொல்லிவிடுகிறேன். மகாலட்சுமி கோவிலுக்கு தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று சென்றுவருவது நல்லது. வாரம் ஒரு முறை தொடர்ந்து சென்று வருவது நல்லது. சின்ன பரிகாரம் போல் தோன்றினாலும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செல்வது கடினம். தொடர்ந்து செய்து பாருங்கள். 

ஒரு சில காலகட்டங்களில் நான் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வருவேன். அப்பொழுது அங்கு கூட்டம் இல்லை. இப்பொழுது பார்த்தால் கோவிலுக்குள் உள்ளே செல்லமுடியவில்லை. பணத்தை தேடி அத்தனை பேர் செல்லுகின்றனர்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

good post..How to get our money if any one cheated an amount from us? Is there any parigaram, please say for victory from court to get our hard money from a cheated person.