Followers

Thursday, July 17, 2014

கர்மவினையை எடுக்கும் ஞானிகள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நல்ல நிலையில் இருக்கும் ஆன்மீகவாதிக்கு ஏதாவது ஒரு நோய் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த நோய் எதற்க்காக அவருக்கு இருக்கிறது என்றால் அவரின் கர்மாவின் வினை. 

சிறிய தலைவலி கூட இருக்கும். அப்படி நோய் இல்லை என்றால் ஏதாவது ஒரு கர்மாவை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். கர்மா வருவது போல் ஒரு காரியத்தை எடுத்து செய்துக்கொண்டு இருப்பார்கள். அப்பொழுது மட்டுமே அவரின் உடலில் அவரின் ஆத்மா இருக்கும். 

அவர்கள் கர்மாவை மட்டும் எடுக்கவில்லை என்றால் அவரின் உடலில் இருந்து ஆத்மா வெளியேறிவிடும். தன் உயிரை வைத்துக்கொண்டு இந்த பூமியில் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்துக்கொண்டு இருப்பார்கள். 

பொதுவாக ஒருவர் ஞானம் அடைந்துவிட்டால் அவர் வெளியில் தன்னை காட்டிக்கொள்ள மாட்டார். அவர் இந்த உலகத்தில் வாழ்வதற்க்கு சரிப்பட்டு வரமாட்டார். அதனால் தான் முக்கால்வாசி ஞானம் அடைந்தவர்கள் தன்னை காட்டிக்கொள்ளாமல் பரதேசி போல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பார்கள்.

நாம் அவர்களை அடையாளம் கூட கண்டுக்கொள்ளமுடியாதபடி இருப்பார்கள். நான் எத்தனையோ பேரை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் துளி கூட தன்னை காட்டிக்கொள்வதில்லை. நம்ம ஆட்கள் கையில் மாட்டினால் அவ்வளவு தான் அவர்களை படுத்தி எடுத்துவிடுவார்கள் அல்லவா அதனால் தான் அவர்கள் தனிமையில் இருக்கின்றனர். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: