Followers

Friday, July 18, 2014

செல்வ வளம் உங்களை தேடி வரும்


வணக்கம் நண்பர்களே!
                    பெரும்பாலும் மக்களுக்கு தேவையானது பணம் மட்டுமே. அந்த பணம் வருவதற்க்கு என்ன வழி என்றாலும் அதனை செய்வா்கள். பணம் வருவதற்க்கு ஒரு வழியைப்பற்றி இப்பதிவில் சொல்லுகிறேன்.

நான் தொழில் அதிபர்களை சந்திக்கும்பொழுது பல டிப்ஸ்களை அவர்களுக்கு கொடுப்பது என்னுடைய வேலையாக இருக்கும். அவர்களை நன்றாக கவனித்து அவர்களை நான் மாற்றி வருகிறேன்.

உங்களுடைய கால்கள் சுத்தமாக இருந்தால் உங்களை தேடி பணம் வரும். என்னுடைய கால்களுக்கு தினமும் ஏதாவது ஒரு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். குளிப்பதற்க்கு முன்பாக கூட இதனை நான் செய்துவிட்டு தான் குளிப்பேன். கால்கள் மிகவும் சுத்தமா இருந்தால் நம்மை தேடி பணம் வரும்.

என்னடா புது கதையாக இருக்கின்றது என்று நினைக்கவேண்டாம். தொடர்ந்து சுத்தமாக வைத்திருங்கள் கண்டிப்பாக உங்களை தேடி செல்வம் வரும்.நாம் நிற்க்கும் கால்கள் நமது வாழ்க்கையை அதிகம் பிரதிபலிக்கும் தன்மை உடையது.

நமது கால்கள் சுத்தமாக வைக்கும்பொழுது நம்மை தேடி மகாலட்சுமியே வருவதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. என்ன நண்பர்களே இனிமேல் உங்களின் கால்கள் சுத்தமா இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: