Followers

Sunday, July 20, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே !
                    ஒரு சில நாட்களுக்கு முன்பு அடையாரில் ஒரு வாடிக்கையாளரை சந்திக்க சென்று இருந்தேன். அடையாரில் அவர் பெயரை சொன்னால் அனைவருக்கும் நன்றாக தெரியும். மிகப்பெரிய தொழில் அதிபர் அவர். அவரின் பையனுக்கு திருமணம் செய்வதற்க்கு சோதிடம் பார்க்கவேண்டும் என்றார்.

அவரின் மகனின் ஜாதகத்தை என்னிடம் கொடுத்து நான் அனைத்து கோவிலுக்கும் சென்று வந்துவிட்டேன். எல்லா பரிகாரத்தையும் முடித்துவிட்டேன் என்றார். நான் அவரிடம் இப்பொழுது தானே ஜாதகத்தை கொடுத்து இருக்கிறீர்கள். அதற்கு முன்பே பரிகாரம் என்று சொல்லுகிறீர்களே என்றேன். அவர் சிரித்தார். ஜாதகத்தை பார்த்த பிறகு அவர் சொன்னார்.

நான் எந்த ஒரு சோதிடர்களிடம் சென்றாலும் ஏதாவது ஒரு தோஷம் இருக்கிறது இதனை கழிக்கவேண்டும் என்று சொல்லி பணத்தை வசூல் செய்துவிடுகிறார்கள். அதனால் பயமாக இருக்கிறது என்றார். கவலைப்படாதீர்கள் நான் அப்படி ஏதும் சொல்லமாட்டேன் நீங்கள் பெண்ணின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னேன்.

இப்பொழுது எல்லாம் சோதிடர்கள் ஆன்மீகவாதிகளை கண்டாலே மக்கள் நடுங்குகிறார்கள். என்ன செய்வது சோதிடம் பார்த்தால் நூறு ரூபாய் கிடைக்கும். பரிகாரம் செய்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று சோதிடர்களின் கணக்கு. 

சோதிடம் பார்ப்பவர்கள் ஆன்மீகவாதிகள் மற்றும் மந்திரவாதிகளை எல்லாம் அந்த காலத்தில் அரசன் அவர்களுக்கு பணத்தை கொடுத்து காட்டில் வாழுங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவான். அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்வான். ஏன் அப்படி அனுப்பி வைத்தான் என்றால் இவர்கள் ஊருக்குள் வந்தால் நாடு தாங்காது என்று அவனுக்கு தெரியும்.

இன்றைய காலத்தில் அரசன் கிடையாது. இவர்கள் எல்லாரும் ஊருக்கு வந்துவிட்டார்கள். ஊரை போட்டு காலி செய்கிறார்கள். எப்பொழுது இவர்கள் ஊருக்குள் வந்தார்களோ அன்றே நாடு அழியும் என்பது உண்மையான ஒரு விசயம். நானும் விதிவிலக்கல்ல நான் வாடிக்கையாளர்களிடம் பணம் பறிப்பது கிடையாது. தொழில் அதிபர்களிடம் பணம் பறிக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: