Followers

Monday, July 21, 2014

நன்றி


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு பல இளைஞர்கள் பெரும் துணையாக இருக்கின்றார்கள். ஜாதககதம்பம் எழுத தொடங்கிய நாட்களில் முதல் இன்று வரை தொடர்ந்து இளைஞர்கள் என்னை ஊக்கவித்து எழுதசொல்லுவார்கள்.

பச்சைப்பரப்புதலைப்பற்றி நான் எழுதிய காலத்தில் இருந்து அதனை பல பேர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்க்கு இளைஞர்கள் பெரும் உதவி செய்து வருகின்றனர். முதலில் திருவாரூரை சேர்ந்த சரவணன் அங்குள்ள நியூஸ் பேப்பரில் இதனை வெளியிட்டு ஒரு நல்ல துவக்கத்தை தொடங்கி வைத்தார்.

அவர் செய்தவுடன் இப்பொழுது பல நண்பர்கள் அதுப்போல் நாங்களும் பிரிண்ட் எடுத்த நோட்டீஸாக வெளியிடுகிறோம் என்று சொல்லுகிறார்கள். அனைவருக்கும் நான் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளேன். அந்தந்த ஊர்களில் நடக்கும் பிரதோஷ விழாக்களில் கொடுக்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள். 

பச்சைபரப்புதலை பொறுத்தவரை நோட்டீஸ் மற்றும் வாய்வழியாக சொல்லுவதற்க்கு என்னிடம் அனுமதி வாங்க தேவையில்லை. நோட்டீஸ் போடும்பொழுது ஜாதககதம்பத்தின் அட்ரஸ் மட்டும் போடுங்கள். ஏன் அப்படி போடச்சொல்லுகிறேன் என்றால் உனக்கு யார் இதனை சொன்னது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களை பாடாய்ப்படுத்திவிடுவார்கள் நமது மக்கள். என்னிடம் கேள்வி வரும்பொழுது அதற்கு தகுந்த பதில் தந்துவிடுவேன்.

உங்களின் பெயர் மற்றும் மொபைல் நம்பரையும் அதில் இணைத்துவிடுங்கள். சந்தேகம் வரும்பொழுது உங்களை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்வார்கள்.

மக்கள் இதனை நம்பவில்லை என்று மட்டும் நீங்கள் நினைக்கவேண்டாம். அவர்களுக்கு பிரச்சினை என்று வரும்பொழுது இது ஞாபகம் வரும். அப்பொழுது செய்ய தொடங்குவார்கள். மக்களுக்கு எப்படியும் ஆறு மாதத்திற்க்குள் பிரச்சினை வந்துவிடும். அப்பொழுது இதனை தான் முதலில் எடுப்பார்கள்.

உங்கள் பகுதி மக்களை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும். அவர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும்பொழுது அவர்களே இதனை ஒரு நாள் செய்யதொடங்குவார்கள். நான் ஒருவன் அனைவருக்கும் இதனை கொண்டுசெல்வது கடினம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நமது நண்பர்கள் இதனை பரப்புங்கள். 

நம் மக்கள் கடன் வாங்கினாலும் பரவாயில்லை  சாமிக்கு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள். நமது மக்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லையை தவிர அவர்கள் செய்யமாட்டேன் என்று ஒரு போதும் சொல்லமாட்டார்கள். 

நம்பிக்கையோடு செய்யுங்கள். நீங்கள் இதனை வெளியிடும்பொழுது என்னிடம் சொல்லிவிட்டால் உங்களின் செயலை ஊக்குவிக்க அம்மனிடம் பிராத்தனை வைப்பேன். பொருள் உதவி செய்வதற்க்கு கொஞ்ச நாட்கள் ஆகும் அதுவரை அம்மனை வைத்து உங்களை ஊக்குவிக்கமுடியும்.

அம்மன் பூஜைக்கு என்று பணம் அனுப்பவர்கள் மறக்காமல் என்னிடம் தெரிவித்துவிடுங்கள். மெயிலில் உங்களைப்பற்றியை தகவல்களை அனுப்பவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: