Followers

Wednesday, July 23, 2014

சோதிடம் என்பது ஒரு வழி


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சோதிட அறிவு கிடைத்துவிட்டது என்று சொல்லவேண்டும். தொலைக்காட்சி மிகப்பெரிய அளவில் புரட்சியை செய்து இருக்கிறது. நீங்கள் கிராமத்தில் சென்று கூட பலனை சொல்லுவதில் தவறாக சொல்லிவிடமுடியாது. மக்களிடம் அந்தளவுக்கு சோதிட அறிவு இருக்கிறது.

சோதிட அறிவு வளர்ந்தளவுக்கு இன்று வரை அதற்கு தீர்வை கண்டுபிடிப்பதில் உள்ள அறிவு வளரவில்லை என்று தெரிகிறது. அதற்கு காரணம் சோதிடத்தை மக்கர் செய்து படித்த சோதிடர்கள் பரிகாரத்தை சொல்லவில்லை. பரிகாரத்தை சொன்னால் தானே மக்கள் பயன்பெறமுடியும். 

எனக்கு சோதிட அறிவு நன்றாக இருக்கின்றது அனைத்தையும் நான் வெளியிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். பின்னோட்டம் போட்டு பாராட்டிக்கொண்டு இருப்பீர்கள். அதனால் எனக்கு மற்றும் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. சோதிடத்தில் அடிப்படை நன்றாக தெரிந்தால் போதும். அதனை வைத்து அனைத்தையும் நாம் சாதித்துக்கொள்ளமுடியும். 

ஒரு மோசமான நிலையில் இருக்கும் ஜாதகரின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பத்து சோதிடர்களிடம் சென்று காட்டுங்கள். அவரின் ஜாதகத்தை பார்த்து பத்து பேரும் இவர் தேறமாட்டார் என்று சொல்லுவார்கள். அவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்து இவரை எப்படியும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேளுங்கள். ஒரு சில நாளில் அவர் முன்னேற்றத்தை காண்பார். 

எப்படி என்று கேட்கிறீர்களா? சோதிடத்தை தாண்டி பல விசயங்கள் இருக்கின்றன. நம் நாட்டில் கோவில்கள் உருவாக்கப்பட்டதே இப்படி தன் விருப்பத்தை அடைய இறைவனின் சக்தியை பயன்படுத்திக்கொள்வதற்க்காக மட்டுமே. அதனால் சோதிடத்தை அளவாக பயன்படுத்தி உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். சோதிடம் ஒரு வழி மட்டுமே அந்த வழியை பயன்படுத்தி மேலே செல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

True Sir and nobody can refuse this statement if they are really a true astrologer.