Followers

Thursday, July 24, 2014

ஆடி அமாவாசை


வணக்கம் நண்பர்களே!
                    ஆடி அமாவாசை வரபோகின்றது. நான் எழுதிய பூர்வபுண்ணிய தொடர் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தோஷம் என்பது ஏற்பட்டதே உங்களின் முன்ஜென்மத்தில் நீங்கள் பிறருக்கு செய்த பாவங்களால் தான் ஏற்பட்டது என்று எழுதியிருக்கிறேன்.

அதற்கு இதுவரை எத்தனை பேர் அவர்களின் பூர்வபுண்ணியத்தோடு தொடர்புக்கொண்டு இருப்பவர்களை கண்டுபிடித்து இருப்பார்கள் என்பது தெரியாது. ஆனால் அதற்கு ஒரு நல்ல தீர்வாக வரும் ஆடி அமாவாசையில் நீங்கள் செய்யமுடியும்.

ஆடி அமாவாசை அன்று உங்களின் ஊரில் பிறர் ஜாதி கோவில்கள் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று நீங்கள் அன்னதானம் செய்யுங்கள். அந்த அன்னதானத்தில் உங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். நீங்கள் அதனை சாப்பிடகூடாது.

இன்றைய காலத்தில் பித்ரு தோஷம் அதிகமாக இருக்கின்றது. அதுவும் தேவர் வன்னியர் கவுண்டர் மற்றும் அதிகமான மக்கள் கொண்ட ஜாதியில் உள்ளவர்களுக்கு அதிகம் பித்ரு தோஷம் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் ஒரு எளிய தீர்வாக இது இருக்கும். 

பித்ரு தாேஷத்தை நீக்கினால் தான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதை காணமுடியும். இந்த வாய்ப்பை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: