Followers

Saturday, July 26, 2014

செல்வவளம் சேருவதற்க்கு வழி


வணக்கம் நண்பர்களே!
                    பணமே பலம் என்ற பதிவை தந்தவுடன் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. அனைவரும் தொடர்புக்கொண்டு உண்மையான ஒரு செய்தியை சொல்லியுள்ளீர்கள் என்று சொன்னார்கள்.

அனைவருக்கும் பணம் இருந்தால் மட்டுமே அடுத்தது என்ன என்று யோசிக்க தோன்றும். அதனால் தான் நான் செல்வ வளம் சேருவதற்க்கு என்ன என்ற பரிகாரங்கள் இருக்கின்றன என்று சொல்லி வருகிறேன். நான் ஒரு காலத்தில் மிகுந்த கஷ்டத்தில் இருந்தேன்.அந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனைகள் கொஞ்சம் அல்ல அதனைப்பற்றி சொல்லி மாளாது.

செல்வவளம் உங்களுக்கு சேருவதற்க்கு ஜாதகத்தில் இரண்டாவது வீடு மிகவும் நன்றாக இருக்கவேண்டும். இரண்டாவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்து அவருக்கு மனதார பிராத்தனை வைக்கவேண்டும். விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து அவரை சிந்தித்தால் போதும். 

நான்கு மணிக்கு எழுவதற்க்கு முடியவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. நான்கு மணிக்கு எழுவதற்க்கு வாய்ப்பில்லை என்றால் படுக்கையில் இருந்து அந்த கிரகத்தை நினைத்தால் போதும்.

இரண்டாவது வீட்டு அதிபதி மனது வைத்தால் போதும் நீங்கள் செல்லவளத்தோடு நன்றாக இருக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு