Followers

Tuesday, July 8, 2014

குலதெய்வமும் வீடும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது அவர் நிலம் வாங்கி இருப்பதாகவும் அந்த இடத்தில் வீடு கட்டமுடியவில்லை என்றும் சொல்லிருந்தார். அவரின் ஜாதகத்தை எனக்கு அனுப்பி இருந்தார்.

அவரின் ஜாதகத்தில் நான்காவது வீடு நன்றாக இருந்தது. அவரின் ஜாதகம் பெரிய அளவில் ஏதும் பிரச்சினையை கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது. அப்படி இருந்தும் அவரால் வீட்டை கட்டமுடியவில்லை.

நம்மிடம் வந்ததால் அவருக்கு நாம் ஏதாவது பலனை சொல்லி ஆகவேண்டும். அவரிடம் நான் உங்களின் நிலத்தை பார்த்தால் மட்டுமே தெரியும் என்று சொல்லிவிட்டேன்.

உண்மையான காரணமாக என்ன இருக்கும் என்றால் அந்த நிலத்தில் தீயசக்திகளின் ஆதிக்கம் இருக்கலாம் அல்லது அவரின் குடும்பத்திற்க்கு வீட்டின் வழியாக ஏதாவது ஒரு பிரச்சினையை அவரின் பெற்றோர்கள் செய்திருக்ககூடும். ஒரு சில பிரச்சினைகளை ஜாதகத்தில் தெரியவராது. பூர்வபுண்ணியத்தின் வழியாக வரக்கூடும்.

குலதெய்வத்தின் அருளை வேறு யாராவது எடுத்திருக்ககூடும். அவர் என்னிடம் பேசும்பொழுது குலதெய்வம் எங்களின் ஊரில் தான் இருக்கிறது. வழிபாடு எல்லாம் சரியாக செய்துக்கொண்டு தான் வருகிறோம் என்றார்.

குலதெய்வ கோவில் உங்களின் நிலத்தில் கூட இருக்கலாம் ஆனால் அந்த குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால் மட்டுமே குலதெய்வத்தைப்பற்றி அறியமுடியும்.

குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றாலும் வீடு கட்ட முடியாது. அவரிடம் உங்களின் வீட்டிற்க்கு வருகிறேன் அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்.

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்க்கு தான் உங்களிடம் பச்சை பரப்புதலை செய்ய சொல்லுகிறேன். ஒரு தடவை செய்தால் போதும் என்று விட்டுவிடகூடாது. தொடர்ந்து செய்யும்பொழுது மட்டுமே அருளை பெறமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: