Followers

Friday, July 4, 2014

அரசமர விநாயகர்


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மன் கோவிலில் விநாயகர் சந்நிதியை பார்த்திருப்பீர்கள். இந்த விநாயகர் சந்நிதி அரசமரத்திற்க்கு முன் அமைத்து இருப்போம். அரசமரவிநாயகரைப்பற்றி உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரிந்து இருந்தாலும் இந்த விசயம் ஒரு நல்ல கருத்தாக உங்களுக்கு அமையும்.

நமது விநாயகர் வலம்புரி விநாயகராக அழைக்கப்படுகிறார். அரசமரத்திற்க்கு முன் அமைந்து உங்களுக்கு மிகப்பெரிய அருளை அவரே முதலில் வழங்கிவிடுகிறார். அதற்கு பிறகு தான் அம்மனின் அருள் உங்களுக்கு கிடைக்கிறது.

அரசமரத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்று தெய்வங்களும் அரசமரத்தில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அப்படி அமைந்த அரசமரத்திற்க்கு அடியில் நமது விநாயகர் அமைந்திருக்கிறது.

இனிமேல் உங்களின் வேண்டுதல்களை முதலில் வைக்கும்பொழுது விநாயகரை மனதில் வேண்டி அதன் பிறகு அம்மனிடம் உங்களின் வேண்டுதல்களை வையுங்கள்.

ஒரு சிலருக்கு எந்த காரியம் செய்தாலும் அதில் தடைகள் அதிகமாக ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் நமது அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்பொழுது தடைகள் ஏற்படும். அவ்வாறு உள்ளவர்கள் மற்றும் அம்மனிடம் வேண்டுதல் வைப்பவர்கள் முதலில் நமது விநாயகரை மனதார பிராத்தணை செய்துவிட்டு வேண்டுதலை வையுங்கள்.

வேலை முடிந்து இன்று சென்னை திரும்பிவிட்டேன். இனி பதிவுகளை தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: