Followers

Monday, July 28, 2014

தவிர்ப்போம்


வணக்கம் நண்பர்களே!
                    சமூக வலை தளங்களில் உங்களின் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளாதீர்கள். என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் நான் சொல்லுவேன் அவர்கள் யாரும் கடைபிடிப்பது போல் தெரியவில்லை. நீங்களாவது இதனை கடைபிடிப்பது நல்லது.

இன்று ஒரு தகவல்களை உங்களைப்பற்றி சேகரிக்க வேண்டும் என்றால் அது முகநூலில் இருந்தே அனைத்தையும் பெற்றுவிடலாம். அனைத்து தகவல்களையும் அதில் போட்டுவிடுகிறீர்கள். முன்பு எல்லாம் குழந்தை பிறந்தால் அதனை போட்டோ எடுக்கமாட்டார்கள். இப்பொழுது மருத்துவமனையில் இருந்து குழந்தை வெளியில் வருவது முதல் அது படிப்படியாக வளர்ச்சி கொள்வதை கூட விடாமல் பகிர்ந்துக்கொள்கிறார்கள்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட விசயத்தை எல்லாம் சமூக வலைதளங்களில் பகிரும்பொழுது அது பிறரின் கைக்கு சென்றுவிட்டால் அது உங்களுக்கே பிரச்சினையாகிவிடும். 

ஆன்மீகவாதிகளில் முக்கால்வாசி பேர் இப்பொழுது முகநூலில் இருந்தே அனைத்து வேலையும் முடித்துக்கொள்கிறார்கள். அதனால் இனிமேல் உங்களைப்பற்றிய விபரத்தை பொதுவாக வைக்காதீர்கள்.

ஆன்மீகவாதிகள் அப்படி என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறீர்களா அதனை நான் சொல்லமாட்டேன். நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். முடிந்தால் தவிர்க்க பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

KJ said...

Hi Sir,

you are right. Most of the film celebrities are also not publishsing there kids photo with media not even single time. May be this is the reason. Also this may lead to Kan thristi which is most powerful weapon to defeat a person.

Kalairajan said...

நல்ல ஒரு தகவல் அய்யா