Followers

Sunday, July 6, 2014

ஆன்மீகமும் மூலிகைகளும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவரும் என்ன தான் யோகா மற்றும் தியானம் சொல்லிக்கொடுத்தாலும் அவர்கள் அவர்களின் வழியை மட்டும் பின்பற்றுவதில்லை பிறர் சொல்லும் வழி முறைகளையும் பின்பற்றுவார்கள்.

பொதுவாக எல்லாரும் ஏதாவது ஒரு மூலிகையை பயன்படுத்த சொல்லுவார்கள். உடலை பாதுகாக்க மூலிகைகளை பயன்படுத்த சொல்லுவார்கள். பக்தி மார்க்கத்தில் கூட மூலிகைகளை தான் பயன்படுத்துக்கிறார்கள். 

கோவில்கள் அனைத்தும் மூலிகை பயன்பாடு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு கோவிலும் அந்தந்த வழக்கத்திற்க்கு தகுந்தவாறு மூலிகைகளை பயன்படுத்துவார்கள். 

அந்த காலத்தில் கோவில்களில் உள்ள விருட்சத்திற்க்கு தான் அதிக சக்தி உண்டு. அந்த விருட்சத்தை தான் வணங்குவார்கள். அதுவும் ஒரு மூலிகை போல் தான். ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு சக்தியை வெளிப்படுத்தும்.மூலிகைகளில் நல்ல சக்தியை அதிகரிக்கவும் மூலிகை இருக்கிறது. தீய சக்தியை அதிகரிக்கவும் மூலிகை இருக்கிறது.

நீங்களும் உங்களுக்கு தெரிந்த மூலிகைகளை பயன்படுத்துங்கள். உங்களின் ஆன்மீகசக்தியை உயர்த்துவதற்க்கு மூலிகைகள் பக்க பலமாக இருக்கும். நெட்டில் தேடிப்பார்த்தால் உங்களுக்கு தேவையான மூலிகைகளைப் பற்றி தகவல் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Veppilai,thulasi magimaikalai sollunga.