Followers

Wednesday, July 16, 2014

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனின் அதிகப்பட்ச சக்தியாக பதினேட்டு சக்தியாக பிரித்து எடுக்கமுடியும். இதனை தான் பதினேட்டு பேருக்கு கொடுக்கமுடியும். நம்மிடம் ஏதாவது பிரச்சினை என்று வரும் நண்பர்களுக்கு அம்மனின் ஒரு சக்தியான சாந்தசொரூபமான அம்மனை அனுப்பி தான் வேலையை செய்வேன். 

சாந்தமாக இருக்கும்பொழுது மட்டுமே அடுத்தவர்களின் பிரச்சினையை கையாளும்பொழுது எந்த விதத்திலும் அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தாது. நீங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் தெய்வங்களை வைத்து வணங்கி வருவீர்கள். கூடுமானவரை அது சாந்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

சாந்தமாக வணங்கினால் உங்களின் பிரச்சினையை அது சாந்தமாக கையாளும். அதே நேரத்தில் நீங்கள் வணங்கும்பொழுதும் நீங்கள் சாந்தமாக இருக்கவேண்டும். நீங்களும் கோபத்தோடு வணங்கினால் உங்களின் தெய்வமும் கோபமாக மாறிவிடும்.

நீங்கள் மகிழ்ச்சியோடு வணங்கும்பொழுது உங்களின் தெய்வமும் மகிழ்ச்சியாக மாறி உங்களுக்கு நிறைய விசயங்கள் நடைபெறும். இதனை கடைபிடித்துப்பாருங்கள் கண்டிப்பாக நல்லது விரைவில் நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...

i am, in saudi arabia

how to pray. Here is no temple . no photos Please help me

Thanks
Antony