Followers

Monday, July 21, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    நமது அம்மனின் கோவிலில் பூஜை செய்யும்பொழுது பொதுவாக எந்தவித மந்திரங்களையும் சொல்லுவதில்லை. ஏன் அப்படி சொல்லுவதில்லை என்றால் ஒரு சக்தி நிலைக்கொண்டு இருக்கும் இடத்தில் நாம் சொல்லும் மந்திரங்கள் அந்த சக்திக்கு இடையூறு ஏற்படும்.

நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலில் அதிகசக்தி வெளிபடுகிறது என்று தெரிந்தால் நன்றாக வணங்கிவிட்டு மட்டும் வாருங்கள். மந்திரங்களை சொல்லவேண்டாம்.

சக்தியின் வெளிப்பாடு அதிகம் வெளியிடுகிறது என்றால் அந்த இடத்தில் நாம் எந்த தவறையும் செய்யகூடாது. நன்றாக பார்த்து வணங்கிவிட்டு வரவேண்டும். நமது அம்மனின் கோவிலும் சக்தியின் வெளிபாடு நன்றாக இருக்கும்.

ஒரு சில விசயங்களை செய்து நான் போட்டோ எடுப்பது போல் செய்து வைத்திருக்கிறேன். இப்படிப்பட்ட அம்மனின் சக்தியை நீங்கள் வணங்கவேண்டும். உங்களின் குறைகளை உடனே அது நிறைவேற்றிக்கொடுத்துவிடும்.  

நான் பூஜை செய்யும்பொழுது தவறு ஏதாவது நடைபெற்றால் அதனை விரைவில் வெளிப்படுத்தி காட்டிவிடும். நான் அதனை திருத்திக்கொள்வது உண்டு. ஒவ்வொரு பூஜையிலும் நான் போட்டாேவை போட்டு இருப்பேன் அதனை எடுத்து பாருங்கள். சக்தியின் வெளிப்பாட்டைப்பற்றி கொஞ்சமாவது புரிந்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: