Followers

Friday, July 25, 2014

மன்னிக்கவும்


வணக்கம் நண்பர்களே!
                    உங்களிடம் ஒரு தவறான ஒன்றை சொல்லிவிட்டேன். அதாவது விரதம் இருங்கள் என்று சொன்னேன். உடலை போட்டு வருத்தவேண்டாம்.

 உடல் பருமனா இருப்பவர்களுக்கு வேண்டுமானால் விரதம் இருக்கலாம். மெல்லிய உடலை வைத்திருப்பவர்கள் விரதம் இருக்க தேவையில்லை. ஒரு சிலருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் விரதம் இருக்கலாம்.

என்னை பொருத்தவரை உடலை போட்டு வருத்தகூடாது என்று நினைப்பேன். மனது ஒரு வம்பளக்கும் ஒரு கருவி.  மனது சொல்லுவதை கேட்டுக்கொண்டு உடலை போட்டு வருத்துவது ஒரு பாவமாக தான் நான் கருதுகிறேன். 

மனது அதுவோடு நிம்மதிக்கு இந்த உடலை போட்டு வருத்துகிறது. உன் உடல் கேட்கும் விசயத்திற்க்கு மனது அந்தளவுக்கு ஒத்துழைக்காது. உனக்கு வேலை இல்லை நான் வேறு விசயத்தில் கவனம் செலுத்துகிறேன் என்று சொல்லும். முக்கால்வாசி பாவங்களை இந்த உடலை செய்ய தூண்டுவதே மனது தான். மனது செய்யும் தவறுக்கு உடலை போட்டுவருத்தவார்கள்.

என் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுவது உன் உடலை நன்றாக கவனித்துக்கொள். மனது சொல்லுகிறது என்று முள்ளில் நடப்பது. அலகு குத்திக்கொண்டு காவடி எடுப்பது, கோவில்களுக்கு நடந்து செல்வது இது எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லிவிடுவேன்.

உடலில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அது தனக்கு தேவையானத்தை கேட்பதை மனது மறுத்துவிடும். உடல் நோயில் படுத்துவிடும். நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்களின் மனது தான் உங்களை போட்டு கொல்லுகிறது. அதனால் விரதம் இருக்க நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். 

விரதம் இருப்பதை விட முன்னோர்களைப்பற்றி நல்ல சிந்தனையை செய்யுங்கள். மனதை போட்டு வருத்தி அவர்களின் ஆத்மாவிற்க்கு சாந்தியை ஏற்படுத்துங்கள். நாளை அமாவாசை இப்படி கூட ஒவ்வொருவரும் செய்யலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ini no viradham jali jali