Followers

Tuesday, July 8, 2014

நவக்கிரக சாந்தி


வணக்கம் நண்பர்களே!
                    நாம் எந்த பரிகாரம் செய்தாலும் அதாவது ஒரு தெய்வத்திற்க்கு ஒரு பூஜை செய்ய போகிறோம் என்றால் நாம் நேரிடையாக அந்த தெய்வத்திடம் சென்று பூஜை செய்துவிட்டு மட்டும் வரகூடாது. முதலில் நாம் நவக்கிரக சாந்தி ஹோமம் செய்யவேண்டும்.

தேவதைகளிடம் சாதாரணமாக சென்று வழிப்பட்டு வந்துவிடலாம் ஆனால் பெரிய பூஜை செய்தால் நாம் முதலில் நவக்கிரக சாந்தி செய்யவேண்டும். நவக்கிரக சாந்தி செய்வதற்க்கு முடியவில்லை என்றால் ஒரு தீபம் மட்டும் ஏற்றிவிட்டு ஒன்பது முறை வலம் வந்த பிறகு நீங்கள் தேவதைகளின் பூஜையை தொடங்கலாம்.

நவக்கிரக சாந்தி செய்துவிட்டால் தேவதைகளின் பலன் உடனே கிடைத்துவிடும். நம்மை ஆட்டி வைக்கும் நவக்கிரகங்களை திருப்திப்படுத்தாமல் நாம் தேவதைகளிடம் செல்லும்பொழுது காரிய தடைகள் வந்துவிடும்.

காரியத்தடைகளுக்கு விநாயகர் வணங்கினால் போதும் என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். விநாயகர் வழிப்பாடு எந்த தெய்வ வழிப்பாட்டை எடுத்தாலும் அது இருக்கும். விஷேசமாக நீங்கள் பூஜை செய்வதாக இருந்தால் நவக்கிரக சாந்தி செய்துவிட்டு செய்யும்பொழுது நமக்கு பலன் உடனே கிடைத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: