Followers

Tuesday, July 22, 2014

தந்திரம் இல்லாமல் மந்திரம் இல்லை


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் ஒரு வார காலமாக கொஞ்ச கோபத்தோடு இருக்கின்றது. யார் மாட்டி இருக்கிறார் என்று மட்டும் தெரியவில்லை. கத்தரிக்காய் முற்றினால் வீதிக்கு வந்துவிடும். யார் வருகிறார் என்று பார்க்கலாம். 


எந்த ஒரு மந்திரப்பிரயோகம் செய்தாலும் அதில் ஒரு தந்திர வேலை இல்லாமல் இருக்காது. தந்திர வேலைகள் செய்யாமல் மந்திரம் வேலை செய்யாது. ஒருவருக்கு நாம் எதனை செய்தாலும் அவரின் தொடர்பு நமக்கு இருக்கவேண்டும். அப்படி அவர் தொடர்பு இல்லை என்றால் அந்த வேலையை முடிக்க பல மாதங்கள் கூட எடுக்கும்.

நானே ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு வேலை செய்யவேண்டும் என்றாலும் அவர்களை என்னை வந்து சந்திக்க வைப்பேன். அப்படி சந்திக்கவில்லை என்றால் போனில் பேச சொல்லுவேன். அப்படி பேச சொல்லும்பொழுது தான் அந்த வேலை நடைபெறும்.

ஒருத்தரை சந்திக்காமல் மற்றும் அவரோடு தொடர்பு இல்லாமல் அவர் வழியாக ஒரு வேலை செய்யவேண்டும் என்றால் நமது உயிர் போய் வந்துவிடும். மொத்த சக்தியையும் விரையம் செய்து அந்த வேலையை நடத்திக்கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு அவதார புருஷர் என்று சொல்லப்படும் கடவுள் அவதாரம் கூட தந்திரம் இல்லாமல் இருக்காது. அந்த கடவுள் ஏதாவது ஒரு தந்திரத்தை கையாண்டு செய்வார். தந்திரம் செய்யும்பொழுது மட்டுமே மந்திரம் வெற்றி அடையும். தந்திரம் இல்லாமல் மந்திரம் இல்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

nallur parames said...

Naan entha thappum seyyala