Followers

Friday, July 25, 2014

தொடர்ந்து செய்யுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவரும் என்னிடம் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்  உடனே போன் செய்து இந்த பிரச்சினை தீர்த்துக்கொடுங்கள் என்று கேட்கின்றனர். இது தவறு கிடையாது.

உங்களுக்கு எல்லாம் நிறைய பரிகாரங்கள் மற்றும் குலதெய்வ வழிபாடு எல்லாம் சொல்லிக்கொடுப்பது எதற்கு என்றால் உங்களின் பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்வீர்கள் என்ற காரணத்தால் மட்டுமே இப்படி சொல்லிக்கொண்டு வருகிறேன்.

ஒரு வழிப்பாட்டை தொடர்ந்து செய்துக்கொண்டு வரும்பொழுது மட்டுமே அந்த வழிபாடு மிகப்பெரிய அளவில் பயனை தரும். உடனே வழிபாட்டிற்க்கு பலன் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் அது உங்களின் தவறாக தான் இருக்கும். 

பச்சைப்பரப்புதலை சொல்லிக்கொண்டு வருகிறேன். எத்தனை பேர் தொடர்ந்து செய்துக்கொண்டு வருகிறார்கள் என்று எனக்கு தெரியாது. அதனை தொடர்ந்து செய்யும்பொழுது மட்டுமே நமக்கு மிகப்பெரிய அளவில் பலனைக்கொடுக்கும்.

எனது நோக்கம் உங்களின் பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுடைய தீர்க்கமுடியாத பிரச்சினைக்கு என்னை தொடர்புக்கொள்ளலாம். சின்ன பிரச்சினைக்கு எல்லாம் என்னிடம் வந்து கேட்ககூடாது. இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதுவது எல்லாம் யாரிடமும் நீங்கள் நிற்க வேண்டாம் என்பதற்க்காக மட்டுமே எழுதுகிறேன். கடைசியில் என்னிடமே வந்து நின்றால் எப்படி?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

வணக்கம்