Followers

Wednesday, July 23, 2014

பணமே பலம்


வணக்கம் நண்பர்களே !
                    இதுவரை நமது நண்பர்கள் அவர்களுக்கு கிடைத்த பணத்தை அனுப்பி வருகின்றனர். அம்மன் மேல் இவ்வளவு பேர் பக்தி வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும்பொழுது நான் ஆச்சரியப்பட்டேன். 

எல்லாம் ஆன்மீகவாதி போல் இல்லாமல் நான் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பேன். பொதுவாக நான் யாரையும் சந்திக்ககூட விரும்புவதில்லை. அதற்கு காரணம் உங்களை என்னை போல் உருவாக்க வேண்டும் என்ற காரணத்தால் அப்படி செய்தேன்.

நீங்கள் என்னை பார்த்துவிட்டால் என்னிடமே உங்களின் பிரச்சினையை சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். நீங்களே உங்களின் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்ற நிலையை உருவாகிவிட்டால் அது எனக்கு கிடைத்த வெற்றியாக நான் எண்ணுவேன்.

இந்து மதத்தில் உள்ள நல்ல விசயங்கள் என்னை உருவாக்கியது. அப்படிப்பட்ட நல்ல விசயங்களை நான் எடுத்த காரணத்தால் இந்த மதத்திற்க்கு என்னால் முடிந்த உதவியை நான் செய்யவேண்டும் என்று நினைத்து இதனை எழுதிவருகிறேன். மற்றும் பல வேலைகள் இனிமேல் செய்ய உள்ளேன்.

எனக்கு பல மதங்களில் உள்ள மக்களின் நட்பு அதிகம் இருந்தாலும் அந்தந்த மக்களின் மதங்களில் உள்ளவர்கள் அவர்களை காப்பாற்றுவார்கள். இந்து மதத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக பணம் இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இப்படிப்பட்ட பணம் இல்லாத மக்களை பிற மதங்களில் உள்ளவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

உங்களின் ஜாதங்களில் உள்ளவற்றை மீறி நீங்கள் நன்றாக வாழ நமது கோவில்கள் உங்களுக்கு உதவுகின்றன. அப்படிபட்ட கோவிலை நீங்கள் விட்டுவிட்டு ஒன்று இல்லாதவற்றிக்கு ஆசைப்பட்டு செல்வது வேதனையான விசயமாக இருக்கின்றது.

அதனை எல்லாம் சரிசெய்யவேண்டும் என்றால் நம் மக்களிடம் பணம் இருக்கவேண்டும். பணம் இருக்கவேண்டும் என்றால் மக்களிடம் உள்ள பிரச்சினையை சரிசெய்யவேண்டும். அப்படி அவர்களின் பிரச்சினையை சரிசெய்ய அவர்களுக்கு உதவுவது தான் நாம் சொல்லும் ஒரு சில வழிப்பாட்டு முறைகள். அந்த வழிபாட்டு முறைகளை மக்களிடம் கொண்டு சென்றாலே போதும். அவர்களே நல்ல நிலையை அடைந்துவிடுவார்கள்.

இதனை செய்வதற்க்கு எல்லாம் பணம் தேவை. நான் பதிவில் அம்மன் பூஜை என்று சொன்னவுடன் ஒரு சில நண்பர்கள் பணத்தை அனுப்பி வருகின்றனர். மிக குறைந்தளவு உள்ளவர்களே இதில் பங்குக்கொண்டுள்ளனர். என்னை பொறுத்தவரை என் கணக்கு அனைவரும் பணம் அனுப்பவேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் பணம் இல்லை என்பது நன்றாக தெரிகிறது.

ஏன் பணம் இல்லை? தன் வாழ்க்கையை ஒழுங்காக நடத்த தெரியவில்லை என்று தெரிகிறது. கணக்கு போட்டு வாழ்க்கையை நடத்துங்கள் என்று சொன்னால் அதுவும் செய்வதில்லை. பிறகு எப்படி பணம் சேமிக்கமுடியும். இதுவரை வந்த ஆன்மீகவாதிகள் அனைவரும் அன்பாக இருங்கள். அருளாக இருங்கள் என்று சொன்னார்களே தவிர உங்களை பணக்காரானாக  இருங்கள் என்று ஒருவரும் சொல்லவில்லை. 

முதலில் நான் சொல்லுகிறேன். நீங்கள் பணக்காரானாக இருங்கள். ஜாதககதம்பத்தின் மந்திரம் பணமே பலம். பணம் இல்லை நீங்கள் அனைத்தையும் இழந்துவிடுவீர்கள். உங்களை நீங்கள் இழக்கும்பொழுது உங்களின் கோவிலை எப்படி காப்பாற்றமுடியும்? பணம் வருவதற்க்கு ஏகாப்பட்ட வழிமுறைகளை நான் சொல்லியுள்ளேன். அதனை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். கொஞ்ச காலத்தில் நீங்கள் பணக்காரானாக மாறிவிடுவீர்கள். மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள். பணமே பலம்.


அமாவாசை அன்று பூஜை செய்யலாம் என்று நினைத்து இருந்தேன். அமாவாசை அன்று அனைத்து கோவிலும் மற்றும் வீடுகளில் விஷேசம் என்பதால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறிவிடும் என்பதால் அதனை தள்ளி இரண்டு நாட்களில் வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன். நமது நண்பர்கள் ஒரு சிலர் சனிக்கிழமை அன்று தான் எங்களுக்கு பணம் வரும் எங்களின் காணிக்கையும் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அவர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்கிறேன்.  அமாவாசை அன்று அம்மன் கோவிலில் சிறிய அளவில் பூஜை செய்யப்படும். பெரிய பூஜையை எந்த தேதி என்று பதிவில் சொல்லுகிறேன்.


நான் சென்ற வீடுகளில் எல்லாம் நான் சொல்லுவதை பரப்பி வருகின்றனர். அந்த வழியில் உங்களுக்கு எல்லாம் நன்றி. முடிந்தவரை நமது மக்களிடம் வழிப்பாட்டு முறைகளை எடுத்துச்செல்லவேண்டியது உங்களின் கடமை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: