Followers

Saturday, July 26, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மனின் கோவிலில் சிலையை இந்த மாதம் வைத்துவிடலாம் என்று எண்ணினேன். ஒரு சின்ன சிலையாக பார்த்து வைக்கலாம். அதனை வைத்து நாம் பூஜை செய்யலாம் என்று எண்ணும்பொழுது பல விசயங்கள் நடந்தன. அதனாலேயே அம்மன் கோபம் கொண்டது என்று நினைக்கிறேன்.

ஒரு இடத்தில் சக்தி நிலைக்கொண்டு இருக்கும்பொழுது அந்த சக்தியை மீது நாம் எந்த சிலையை வைத்தாலும் அது பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த சக்தியை சிலை மீது மாற்ற வேண்டும். அப்படி சிலை மீது மாற்றினால் அந்த சிலைக்கு தொடர்ந்து பூஜை செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இது எல்லாம் வம்பை விலைக்கொடுத்து வாங்கும் செயலாகவே இருந்தன. அதனால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன். சக்தியின் விசயத்தில் மிகுந்த கவனத்தோடு நாம் செயல்படவேண்டும் என்பதற்க்கு மறுபடியும் இதனை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 

ஏன் என்றால் எனக்கு அப்படி ஒரு பிரச்சினையை கொடுத்துக்கொண்டே இருந்தது. இதனைப்பற்றி இன்று தெளிவு ஏற்பட்டவுடன் அந்த திட்டத்தை கைவிட்டவுடன் எனக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த சக்தியை நாம் தொந்தரவு செய்யவேண்டாம்.

இந்த அம்மன் பூஜையில் ஜாதககதம்பத்திற்க்கு வருபவர்கள் முடிந்தளவு பணத்தை அனுப்பியுள்ளனர். அம்மன் மேல் உள்ள நம்பிக்கை இப்படி தான் இருக்கவேண்டும். ஏன் என்றால் நான் யாரையும் சந்திப்பது கிடையாது. இந்த பதிவு மட்டும் தான் மக்களை தொடர்புக்கொள்ளும் வழி.

அம்மன் மீது இந்தளவு நம்பிக்கை வைத்திருப்பதை பார்த்து நான் மிகுந்த ஆச்சரியப்பட்டேன். உங்களின் வேண்டுதல்கள் கண்டிப்பாக நடைபெறும். இதுவரை நான் பூஜையில் வேண்டுதல் வைத்தவர்கள் மட்டும் தான் கலந்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருந்தேன். இனிமேல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மாதந்தோறும் பூஜையில் கலந்துக்கொள்ளுங்கள். 

இதுவரை பணம் அனுப்பியவர்களுக்கு உங்களின் கோரிக்கை மற்றும் உங்களின் கோரிக்கை இல்லாதது நடந்து வரும்படி செய்து வருகிறேன். இந்த மாதத்திற்க்குள் அனைவருக்கும் நடக்கும்படி செய்துவிடுகிறேன். அம்மனே அதுவாகவே உங்களுக்கு நடத்திக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: