Followers

Sunday, July 20, 2014

ஏன் பூஜை செய்யவேண்டும்?


வணக்கம் நண்பர்களே!
                    நாம் ஏன் ஒவ்வொரு மாதத்திலும் பூஜை செய்கிறோம் என்றால் நமக்கு உதவிக்கொண்டிருக்கும் அந்த அம்மனுக்கு ஒரு நன்றி கடனை செலுத்துவதற்க்காக இதனை செய்கிறோம்.

உங்களின் ஜாதகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் ஆசைப்படுவது ஒரு தடவை மட்டும் நடைபெறும். மேலும் விளக்கமாக பார்க்கலாம். இப்பொழுது அனைவரும் பணத்திற்க்காக அதிகமாக ஆசைப்படுகிறார்கள். பொதுவாக ஜாதகத்தில் ஒருத்தருக்கு வாழ்க்கையில் அதிகப்பட்சமாக ஒரு தடவை மட்டும் பணம் வந்து கொட்டும். நமது மக்கள் அதனை சரியாக பயன்படுத்த மாட்டார்கள். ஊதாரிதனமாக செலவு செய்வார்கள். 

பணம் வந்துக்கொண்டு இருப்பது ஒரு சில காலகட்டத்தில் அது நின்றுவிடும். அப்பொழுது இவர்களுக்கு வறுமை வந்தவுடன் மறுபடியும் பணத்தின் மீது ஆசை வரும். இவர்களுக்கு ஆசை வருவதால் உடனே கிடைத்துவிடாது.ஏன் என்றால் இவர்களின் கோட்டா முடிந்துவிட்டது. பிறகு எங்கிருந்து பணம் வரும் மறுபடியும் கடவுளிடம் தான் கேட்கமுடியும். அப்படி தான் ஒவ்வொரு ஆசைகளுக்கும் நாம் கடவுளிடம் கேட்டு தான் பெறமுடியும். அப்படி பெறுவதற்க்கு ஒரு வழி தான் நமது பூஜைகள்.

ஒரு சில ஜாதகத்தில் ஒரு சில விசயங்கள் மறுக்கப்பட்டு இருக்கும். சம்பந்தப்பட்ட நபர் அது எனக்கு வேண்டும் என்று நினைக்கும்பொழுது கடவுளிடம் பூஜைகள் செய்து பெறமுடியும். அதற்கு தான் பூஜைகள். நமது தேவைகள் மற்றும் நமது பாதுகாப்பு இரண்டுக்கும் தான் அதிகமான பூஜைகள் நடைபெறும்.

உங்களின் ஜாதகத்தை பாருங்கள் உங்களின் ஆசைக்கு அது வழிவிடுமா என்று பார்க்கவேண்டும் பார்த்த பிறகு அது வழிவிடவில்லை என்றால் நீங்கள் பூஜைகளில் இறங்கி அதனை சாதித்துக்கொள்வது நல்லது.



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Poojaiyil namppikkai vendum