Followers

Thursday, July 17, 2014

வசிய அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    சமீபத்தில் திருப்பூர் சென்றபொழுது எனது தொழில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆசிரமத்திற்க்கு செல்வோம் என்று முடிவு செய்து காரில் சென்றோம். அந்த ஆசிரமத்தை இதுவரை பார்த்தில்லை அப்படி என்ன தான் அங்கு இருக்கிறது என்று பார்க்கலாம் சென்றோம்.

அங்கு சென்று அனைத்தையும் பார்த்தோம். நாம் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய காப்பர் செம்பு மற்றும் நல்ல உலோகலங்களை வைத்து நம்மை ஈர்க்கிறார்கள். அனைத்தையும் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்கு லேசான தலைவலி உருவாகியது. 

திருப்பூர் வந்த பிறகு அன்று இரவே சென்னை திரும்ப வேண்டி இருந்ததால் இரயில் வந்தேன். மனதில் சின்ன குழப்பம் போல் இருந்தது. வேலை காரணமாக இருந்ததால் ஒய்வு இல்லாமல் இருப்பதால் அப்படி இருக்கும் என்று நினைத்தேன்.

காலையில் குளித்துவிட்டு அம்மனின் பூஜையில் அமர்ந்த பொழுது தான் தெரிகிறது. அவர் நன்றாக வசியம் செய்து வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மக்களை கவர்வதற்க்கு ஒரு சக்தியை வசியம் செய்து அந்த இடத்தில் வைத்திருக்கிறார். ஒரு ஆன்மீகவாதிக்கே குழப்பத்தை தருகிறது என்றால் சாதாரணமாக ஒருவர் சென்றால் அவர் அப்படியே மயங்கி விழுந்துவிடுவார்.

மக்களை கவர்ந்து இழுப்பதற்க்கு இந்த வேலையை செய்து இருக்கிறார். உண்மையில் இது எல்லாம் அஷ்டகர்மாவில் செய்ய கூடிய வேலை. அவரின் வேலைக்கும் அவரின் பெயருக்கும் இப்படி செய்திருக்கிறார்.

மக்களை ஒருபொழுதும் இப்படி இழுப்பது தவறு என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் ஆன்மீகவாதிகளை தேடிச்செல்லும்பொழுது மிக எச்சரிக்கையுடன் செல்லுங்கள். இவர்களின் பிழைப்பிற்க்கு ஏதாவது வில்லகத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதில் நீங்கள் விழுந்துவிடாதீர்கள். கோவிலுக்கு செல்லுங்கள் மற்றும் உண்மையில் நல்ல ஆன்மீகவாதியாக இருந்து அவர் மக்களை ஈர்க்கும்வேலையில் இல்லை என்றால் சென்று வரலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: