Followers

Tuesday, July 8, 2014

குழந்தையின்மை


வணக்கம் நண்பர்களே!
                    இந்தியாவில் தற்பொழுது குழந்தையின்மை குறைந்து வருகிறது. பத்து திருமணம் நடந்தால் அதில் ஐந்து தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தாலும் அதுவும் ஏகப்பட்ட மருத்துவ உதவியுடன் குழந்தை உருவாகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த இயற்கையை அப்படி செய்தாலும் முக்கால்வாசி தவறு மனிதர்களின் கையில் இருக்கிறது. 

பல இளைஞர்களுக்கு ஆண்மை சக்தியில் குறை இருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். நாம் பயன்படுத்தும் உணவு பழக்கவழக்கம் நமது சந்ததியை அழிக்கிறது என்று சொல்லியுள்ளேன். உங்களின் சந்ததியை அழிப்பதில் முதல் இடத்தில் இருப்பது நமது உணவு முறைகளில் உள்ள கலப்படம் தான். நான் என்ன தான் சொன்னாலும் கம்பெனி தயாரிப்புக்களை வாங்கி பயன்படுத்துகிறீர்கள்.

பல இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துக்கொண்டு இருக்கின்றனர். வெப்பம் மிகுந்த நாடான நமது நாட்டிற்க்கு ஜூன்ஸ் அணியகூடாது. ஜீன்ஸ் பேண்ட் அணிந்தால் ஆண்மை குறைப்பாடு ஏற்படும். பல பேர் அலுவலகத்திற்க்கே இதனை தான் அணிந்துக்கொண்டு செல்லுகின்றனர். 

ஜீன்ஸ் அணிவதை தவிருங்கள். வீட்டிற்க்கு வந்தால் உங்களின் உள்ளாடைகள் வரை கழட்டிவிட்டு அமருங்கள். உங்களின் உடலில் வெப்பம் அதிகரித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.

அதிக நேரம் கம்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள். இயற்கையான இடங்களுக்கு செல்லுவதை அதிகம் விரும்புங்கள். உங்களின் உடலை குளிர்ச்சியாகவே வைத்திருக்க பாருங்கள். உங்களின் உடல் குளிர்ச்சி ஏற்பட்டால் உங்களுக்கு நல்லது. இயற்கையான பொருட்களை உபயோகப்படுத்தும்பொழுது உங்களின் ஆண்மை சக்தி வளரும்.

ஜாதகத்தால் வரும் பிரச்சினை குறைவாக இருந்தாலும் நீங்களே சென்று வாங்கிக்கொள்வது தான் அதிகமாக இருக்கிறது. மனிதன் தனக்குதானே வாழவேண்டுமே தவிர பொருட்களுக்காக வாழகூடாது. ஜீன்ஸ் வைத்திருப்பதால் போடுகிறேன் என்று சொல்லகூடாது. எனக்கு என்ன தேவையோ அதனை தான் நான் அணிவேன் என்று இருக்கவேண்டும். ஆன்மீகத்தை நாடி போவதற்க்கு முன் உங்களை திருத்திக்கொண்டால் நல்லது. அதிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: