Followers

Thursday, August 21, 2014

விரைய தசா பகுதி 40


வணக்கம் நண்பர்களே!
                    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு விரைய வீட்டில் புதன் அமர்ந்து இருந்தது. புதன் தசா ஆரம்பித்தவுடன் அவர் வெளிநாட்டிற்க்கு சென்று வந்தார். வேலையும் நன்றாக சென்றுக்கொண்டிருந்தது.

நண்பருக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணம் முடிந்தவுடன் மனைவி இவரை தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்று வற்புறுத்தினார். நண்பரின் குடும்பத்தில் தாய் தந்தை மட்டும் தான் இருந்தனர். இந்த குடும்பத்திர்க்கே நண்பரின் மனைவி இவரை பிரச்சினை செய்ய ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்திற்க்கு மேல் இவரால் தாங்க முடியவில்லை. பிரச்சினை ஆரம்பித்துவிட்டது மனைவிக்கு ஆதரவாக அவரின் தந்தை சண்டைக்கு வந்தார். இப்பொழுது எல்லாம் பெண் பிள்ளை பெற்றால் பெண்ணின் அம்மா அப்பாவே பிள்ளையை குடும்பத்தில் இருந்து பிரித்து கொண்டு வந்தவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நண்பர் ஒரு கட்டத்திற்க்கு மேல் சென்று விவாகாரத்து வரை சென்றுவிட்டார். பெண்ணின் தந்தை ஆள் எல்லாம் வைத்து இவரை மிரட்ட ஆரம்பித்துவிட்டார். நண்பருக்கு பெரிய பிரச்சினையை புதன் தந்தது. புதன் மாமனார் வழியாக பிரச்சினையை தந்தது என்று சொல்லவேண்டும்.

இவருக்கு பரிகாரமாக நான் சொன்னது. குதிரை வாகனத்தோடு இருக்கும் அய்யனார் கோவிலுக்கு சென்று ஒரு சில பூஜைகளை செய்ய சொன்னேன். அவரும் செய்தார். ஒரு சில நாட்களிலேயே அவரின் மனைவி இவரின் வீட்டிற்க்கு திரும்பி வந்து சந்தோஷமாக குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டார். 

என்ன பூஜை என்று கேட்காதீர்கள் அது கம்பெனி ரகசியம். இப்படிப்பட்ட பிரச்சினை வந்தால் நீங்கள் அய்யனார் கோவிலை வணங்கினால் போதும். பிரச்சினை ஒரளவுக்கு குறைந்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: