Followers

Wednesday, August 27, 2014

விரைய தசா பகுதி 41


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் ஒரு நண்பர் ஜாதகம் பார்த்தார். அவரின் ஜாதகத்தில் விரைய வீட்டில் மாந்தி அமர்ந்து இருந்தது. மாந்தியோடு புதன் சேர்ந்து அமர்ந்து புதன் தசா நடைபெற்றது.

அவர் என்னிடம் எனக்கு வித்தியாசமான கனவுகள் ஏற்படுகிறது. நான் பார்க்ககூடாதை எல்லாம் பார்க்கிறேன் என்றார். நான் நேரில் கூட இரவில் இப்படி பேய் மாதிரி பார்க்கிறேன் என்று சொன்னார்.

நான் பேய் எல்லாம் நம்புவதில்லை என்றாலும் இவர் சொல்லுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நான் அவர் சொல்லுவதை உன்னிப்பாக கவனித்துவிட்டு அவரிடம் சொன்னேன். இனிமேல் இப்படி எல்லாம் உங்களுக்கு நடைபெறாது என்று சொல்லிவிட்டு அம்மன் வணங்குங்கள் என்று சொன்னேன்.

மாந்தி விரைய வீட்டில் அமரும்பொழுது வித்தியாசமான கனவு ஏற்படும். மாந்தி என்பது ஆவி உலகத்தை குறிக்கும் கிரகம் என்பதால் அவர் கண்டது நான் பொய் என்றும் சொல்லமுடியாது. ஆவியுலகத்தில் உள்ள விசயங்கள் அப்படிப்பட்டவை.

நமது அம்மனை வணங்கினாலே போதும். இந்த மாதிரி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நமது அம்மன் அல்லது கிராமத்து தேவதையாக பார்த்து வணங்கினால் இதற்கு நல்ல தீர்வு ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: