Followers

Friday, August 1, 2014

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    கடந்த மாதம் குறைந்த பதிவுகளை தரமுடிந்தது. கொஞ்சம் வேலை அதிகமானதால் குறைந்த பதிவுகளை தரமுடிந்தது. இந்த மாதம் அம்மனின் அருளால் உங்களுக்கு நிறைய பதிவுகளை தருகிறேன்.

அம்மன் பூஜை முடிந்து இன்று காலை சென்னை திரும்பிவிட்டேன். ஒவ்வொருவராக இனி மேல் தொடர்புக்கொண்டு பேசுகிறேன். பல பேர்கள் ஜாதகபலனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் பலன்களை பார்க்கலாம்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதல் நீங்கள் செய்யும்பொழுது உங்களின் குலதெய்வத்திற்க்கு உகந்த நாளாக பார்த்து செய்யலாம். குலதெய்வம் தெரியாதவர்கள் அவர்களின் இஷ்டதெய்வத்தை வணங்கலாம். இஷ்டதெய்வத்திற்க்கும் பச்சை பரப்புதல் செய்யலாம்.

ஒவ்வொரு நண்பர்களும் அவர் அவர்களின் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து கடைபிடித்தாலே போதுமான ஒன்று. எப்படிப்பட்ட கிரக தோஷத்தையும் நீக்கும் உங்களின் குலதெய்வம்.

உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குலதெய்வ வழிப்பாட்டைப்பற்றி சொல்லிவிடுங்கள். அவர்களும் நன்றாக இருக்கவேண்டும். பலர் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் தான் ஆனால் அவர்களுக்கு எப்படி வழிபாட்டை செய்வது என்பது தெரியாது. அதனால் அவர்களுக்கு சொல்லி கொடுத்து நீங்கள் புண்ணியத்தை பெற்றுவிடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: