Followers

Thursday, August 14, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளரை சந்திக்க சென்று இருந்தேன். அவர்கள் அவர்களின் உறவுக்காரர்களின் ஜாதகத்தை கொடுத்து பலனை கேட்டார்கள். அது பெண்ணின் ஜாதகம் அந்த ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் ராகு அமர்ந்து இருக்கிறது.

பெண்ணின் கணவர் சூதாட்டத்தில் இறங்கி அதிக பணத்தை விட்டவர். விட்டுக்கொண்டு இருக்கிறார். இரவில் தண்ணி அடித்துவிட்டு ஒரே பிரச்சினையை தருகிறார் என்று சொன்னார்கள்.

பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் ராகு இருப்பதால் இப்படிப்பட்ட பிரச்சினை என்று நாம் சொன்னாலும் திடீர் என்று தான் இந்த பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அப்பொழுது அந்த பெண்ணின் ஜாதகத்தில் என்ன தசா நடக்கிறது என்று பார்த்தால் புதன் தசா நடைபெறுகிறது. 

புதன் லக்கினாதிபதியாக இருக்கிறார். லக்கினத்தில் கேது இருக்கிறது. புதன் தசாவில் ராகுவின் புத்தியில் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. என்னடா இது எக்குதப்பா பிரச்சினையை தருகிறதே எப்படி பரிகாரத்தை சொல்லுவது என்று அம்மனை நினைத்தேன். அப்பொழுது ஒரு பரிகாரம் நினைவுக்கு வந்தது.

சுதர்சன எந்திரத்தை வைத்து ஒரு பூஜை செய்ய சொல்லிவிட்டு வந்தேன். சுதர்சன ஹோமம் செய்வதற்க்கு எல்லாம் அவர்களின் பொருளாதார நிலைமை தடுப்பதால் மாற்று ஏற்பாடு செய்து இதனை சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

சுதர்சன எந்திரத்தை கோலமாக வீட்டில் வரைந்து அதனை பூஜிக்க சொன்னேன். இது ஒரு எளிய வழி. நெட்டில் தேடிப்பார்த்தால் சுதர்சன எந்திரம் மற்றும் அவரின் மந்திரம் கிடைக்கும். இப்படிப்பட்ட நிலையில் உங்களின் ஜாதகம் இருந்தால் பயன்படுத்திபாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: