Followers

Sunday, August 3, 2014

குழந்தையின்மை


வணக்கம் நண்பர்களே!
                    இன்று இளம்வயதில் திருமணம் செய்தால் கூட பல பேருக்கு குழந்தைகள் பிறப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவில் இன்னும் பத்து வருடங்களுக்கு இப்படியே சென்றால் யாருக்கும் குழந்தை பிறக்காது இதனை படித்துவிட்டு நீங்கள் சிரிக்கலாம் ஆனால் உண்மை.

இந்த உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டு தான் நமது அரசாங்கம் பட்ஜெட்டில் மக்கள் தொகையை கட்டுபடுத்தும் செயலுக்கு எந்த நிதியும் ஒதுக்கியதாக எனக்கு தெரியவில்லை. ஏன் என்றால் நாம் சாப்பிடும் சாப்பாடு நமது வம்சத்தை அழிக்கிறது என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை.

நாம் சாப்பிடும் சாப்பாடு அனைத்தும் இரசாயன உரமாக மாறிவிட்டது. இதனை தவிர்த்தால் நல்லது என்று சொல்லிவருகிறேன். ஒருவருக்கு குழந்தையில்லை என்று சொன்னார்கள் அவர்களுக்கு நான் ஜாதகம் பார்க்க அவரின் வீட்டிற்க்கு சென்று இருந்தேன்.

அவர்களிடம் நீங்கள் வாங்கும் மளிகைப்பொருட்கள் எங்கு வாங்குகிறீர்கள் என்று கேட்டேன்.அவர்கள் சொன்னது எல்லாம் ஒரு பிராண்டடு கம்பெனி பெயரை சொல்லி வாங்கி உபயோகிறேன் என்று சொன்னார்கள். அவர்களிடம் ஜாதகத்தை பார்க்காமலே உங்களின் பையனுக்கு குழந்தை பிறக்காது என்று சொன்னேன். நாம் உபயோகப்படுத்தும் மளிகைப்பொருட்கள் எல்லாம் பாக்கெட்டில் வர தொடங்கிய நாட்களில் இருந்து நமது சந்ததினருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் சென்றுவிட்டது.

இயற்கையாக வாங்கி உபயோகப்படுத்துங்கள் என்று சொன்னால் கேட்பதில்லை. நீங்கள் குழந்தையில்லை என்று மருத்துவர்களிடம் மருந்து எடுத்துக்கொண்டு இருந்தால் உடனே நீங்கள் இயற்கையாக சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் சாப்பிடும் மருந்தும் வேலை செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: