Followers

Saturday, August 16, 2014

மகிழ்ச்சி



வணக்கம் நண்பர்களே!
                    இப்பொழுதுக நிறைய நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வருவதால் பதிவுகள் குறைந்துள்ளன. இரவில் உட்கார்ந்து தான் எழுதவேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும்பொழுது வித்தியாசமான அனுபவம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும்பொழுது ஜாதககதம்பத்தில் இல்லாத விசயங்களை அதிகம் சொல்லுகிறேன். அவர்களும் அனைத்தையும் நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள்  எனது வார்த்தைக்கு இவ்வளவு மரியாதை இருக்கிறதா என்று இப்பொழுது தான் பார்க்கிறேன்.

நண்பர்களின் வீடுகளுக்கு செல்லும்பொழுது அவர்கள் எப்படி வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நன்றாக கவனிக்க முடிகிறது. அவர்களுக்கு தேவையான விசயங்களை சொல்லிக்கொடுக்கிறேன்.

ஜாதககதம்பத்தில் சொன்ன விசயங்களை முடிந்தளவு ஒவ்வொரு வீடுகளிலும் செய்துக்கொண்டு இருப்பதை கேட்கும்பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும்பொழுது அவர்களின் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மிகு உன்னிப்பாக நான் கவனிப்பேன்.

நாம் சொல்லிக்கொடுப்பது இவர்களோடு நிற்கிறதா அல்லது இவர்களின் குழந்தைகளுக்கு செல்லுகிறதா என்பதை நன்றாக கவனிக்கமுடிகிறது. முடிந்தளவு இந்த விசங்கள் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லிக்கொண்டே வருவேன்.

மாதம் மாதம் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் வீடுகளுக்கு செல்லும்பொழுது அவர்கள் எனக்கு தனியாக பணம் கொடுக்கிறார்கள். இதனை தவிர்க்கவேண்டும். உங்களின் வீடுகளுக்கு வருவதே எனக்கு மகிழ்ச்சி மீண்டும் நான் உங்களின் வீடுகளுக்கு வந்து நிறைய விசயங்கள் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் பணம் கொடுப்பதை தவிர்க்க பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: