Followers

Sunday, August 3, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    பரமேஸ் அவர்கள் ஆண்கள் மட்டும் படிக்கவும் பதிவை படித்துவிட்டு ஒரு சில கருத்து வேறுபாடு வரும் தானே என்று கேட்டுருந்தார்.

உங்களை எல்லாம் புத்திசாலியாக இருங்கள் என்று சொல்லுகிறேன். அப்படி என்றால் என்ன அந்த சக்தியை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன். கருத்து வேறுபாடு என்பது புரிதல் குறைவாக இருக்கும்பொழுது வருவது. நீங்கள் நல்ல முறையில் எடுத்து சொன்னால் அவர்கள் புரிந்துக்கொள்ள போகிறார்கள். நீங்கள் சொல்லுவது சரியாக இல்லாதப்பொழுது கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும்.

பொதுவாக ஆண்கள் நிறைய விசயங்களைப்பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும் அப்படி தெரிந்து வைத்திருந்தால் மிகவும் நல்லது. திறமையுள்ளவன் பிழைத்துக்கொள்வான். அனைத்தையும் பயன்படுத்தினால் நீங்கள் உயர்வீர்கள். பயன்படுத்தவில்லை என்றால் கீழே சென்றுவிடுவீர்கள். 

உங்களின் மனைவி உங்களுக்கு சக்தியை தருபவள் என்று சொல்லிவிட்டேன். பயன் அடைவதும் பயன் அடையாததும் உங்களின் கைகளில் தான் உள்ளது. புத்தி உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்.

ஒரு சில பெண்கள் அறியாமையாக இருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் தான் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்களை புரிந்துக்கொள்வது கடினம் என்பார்கள். அதாவது பெண்கள் இதயத்தில் வாழ்பவர்கள். ஆண்கள் தலையில் அதாவது மூளையில் வாழ்பவர்கள் என்பார்கள். ஒவ்வொருவரின் மனைவியை புரிந்துக்கொள்வது கடினம் தான் இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் இதயத்தில் வைத்து சிந்திக்க தொடங்கினால் அவர்களை எளிதில் புரிந்துக்கொள்ளமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.