Followers

Saturday, August 2, 2014

அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                              நான் ஒருவரை சந்திக்க சென்று இருந்தேன். அவர் ஒரு யோகா வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறார். ஜாதகத்தில் எல்லாம் அந்தளவுக்கு நம்பிக்கையில்லை. அவர் நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்கிறார். அப்படி இருந்தும் ஒரு சில பிரச்சினைகள் அவரின் குடும்பத்தில் இருக்கிறது.

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒரு யோகா ஆசிரியர் அவருக்கு யோகாவைப்பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனை தவிர ஆன்மீகத்தைப்பற்றி அந்தளவுக்கு தெரியவில்லை. அவரிடம் உங்களுக்கு இருக்கும் பிரச்சினையை உங்களின் யோகாவால் தீர்க்கமுடியாது. அதனால் ஆன்மீகத்தைப்பற்றி ஒரளவு படியுங்கள் அதன் பிறகு நாம் இருவரும் சந்தித்து பேசிக்கொள்ளலாம் என்று சொன்னேன்.

இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நாம் கடவுளை எல்லாம் நம்பாமல் இருக்கலாம் ஆனால் நமது குடும்பத்திற்க்கு என்ன என்ன குறைகள் இருக்கின்றன அதனை எப்படி சரி செய்யமுடியும் என்பதை ஆன்மீகத்தின் துணைக்கொண்டு தான் நாம் அறியமுடியும்.

கடவுள் மறுப்புக்கொள்ளை எல்லாம் வெளியில் காட்டிக்கொண்டாலும் உங்களின் குடும்பத்திற்க்குள் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தின் பிரச்சினையை தீர்க்க ஆன்மீகம் பயன்படுகிறதா என்று பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு ஆன்மீக வழி மட்டும் இல்லை என்றால் நமது குடும்பம் பின்தங்கிய குடும்பமாக மாறிவிடும். ஆன்மீகவழியை பயன்படுத்தி உங்களின் குடும்பத்தின் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே அதில் என்ன தான் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டால் உங்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம். அவரிடம் நமது ஜாதககதம்பத்தின் முகவரியை தந்து இதனை படியுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: