Followers

Wednesday, August 27, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    சக்தியை பற்றி நிறைய சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும். அதன் பிறகு நீங்களே ஆன்மீகத்தை எளிதில் புரிந்துக்கொள்ளமுடியும்.

இல்லறத்தில் இருந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் சாமியாராக இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் தற்பொழுதும் பார்க்கலாம். இவர்கள் மட்டும் சக்தியோடு எப்படி இருக்கமுடிகிறது என்று நீங்கள் ஒரு நாள் யோசித்து பார்த்து இருக்கிறீர்களாக?

அனைவராலும் சக்தியோடு இருக்கமுடியும் ஆனால் நாம் அதனை நம்புவதில்லை அதற்க்கான வழிமுறைகளை யாரும் பின்பற்றி வருவதில்லை. அந்த காலத்தில் பார்த்தீர்கள் என்றால் இல்லறத்தில் இருப்பவர்கள் தான் மிகப்பெரிய சாமியாராக இருப்பார்கள். இது எப்படி சாத்தியம் என்று பார்த்தால் அதனுள் ஒரு விசயம் புலப்படும்.

நான் ஆண்கள் மட்டும் படிக்கும் பதிவில் ஒரு விசயத்தைப்பற்றி சொல்லிருந்தேன். அதாவது பெண்களை நாம் மதித்தால் மட்டுமே நமக்கு சக்தி கிடைக்கும் என்று சொல்லிருந்தேன். 

நாம் அவர்களை மதிப்பது ஒரு வழியாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து நாம் சக்தியை எடுக்க கற்றுக்கொள்ளவேண்டும் அப்படி எடுக்க கற்றுக்கொண்டால் நாம் எளிதில் மிகப்பெரிய சக்தி படைத்தவர்களாக மாறிவிடமுடியும். நான் நிறைய வீட்டிற்க்கு சோதிடம் பார்க்க செல்லும்பொழுது நன்றாக கவனித்து பார்த்த ஒரு விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். 

ஆண்களை பார்க்கும்பொழுது நோஞ்சானாக இருக்கிறார்கள் என்ன காரணம் என்றால் இவர்களின் சக்தியை அனைத்தையும் அவர்களின் மனைவி பிடுங்கிக்கொள்கிறார்கள் இவர்கள் சக்தி இல்லாமல் இருக்கிறார்கள். மனைவியிடம் இருந்து சக்தியை பெறுவதற்க்கு பதில் இவர்கள் தங்களுடைய சக்தியை இழந்து நிற்கிறார்கள்.

ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் சக்தியை பெறுகிறான் என்றால் அந்த ஆணை எவனாலும் வெல்ல முடியாது. மிகப்பெரிய சக்தி பீடமாகவே ஆண் விளங்கிவிடுவான்.

எப்படி பெண்களிடம் இருந்து ஆண் சக்தியை பெறுவது என்று கேட்கிறீர்களாக ஒரு நல்ல சாமியாராக பார்த்து இதனை தெரிந்துக்கொள்ளுங்கள். இதனைப்பற்றி நான் சொல்லகூடாது. ஒவ்வொரு ஆணும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் அவனால் மிகப்பெரிய சக்தியோடு இருக்கமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ithukku naanga samiyarai poi parthal avar unmaiyaana samiyaraai irukka vendume.