Followers

Thursday, August 28, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில நேரங்களில் எனது ஆத்மா வெளிக்கிரகங்களுக்கு சென்று வருவதை நான் உணர்ந்து இருக்கிறேன். முழுமையாக உணர்ந்தது கிடையாது அதாவது எந்த இடம் என்பது தெரியவில்லை.

ஒவ்வொருவரின்  ஆத்மாவும் வெளியில் சென்று வருகிறது என்பதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியுள்ளேன். கொஞ்சம் நல்ல முறையில் நீங்கள் ஆன்மீகப்பயிற்சி எடுத்தால் அதனை உணரமுடியும்.

பல இடங்கள் நமக்கு அருகிலேயே அற்புதமாக இருக்கின்றது ஆனால் நம்மால் அதனை பார்க்கமுடியாதப்படி கடவுள் செய்திருக்கிறார். மிக அற்புதமான உலகமாகவே இருக்கிறது. மிக அழகாகவும் இருக்கிறது.

நரகமான உலகமும் இருக்கின்றது. மிகவும் மோசமான இடங்களாகவே அது இருக்கிறது என்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு வேலை அது நரகம் என்று சொல்லுகிறார்களே அதுவாக இருக்குமோ என்று கூட நினைத்தேன்.

இதனை நீங்கள் நம்பமாட்டீர்கள் ஆனாலும் நம்புவர்களுக்கு சொல்லுகிறேன். உங்களுக்கு இது தெரியும்பொழுது என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளமுடியும்.நாம் என் என்னவோ செய்துக்கொண்டு நமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். நாம் நன்றாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் என்றாலும் நமது தேடுதலை அதிகப்படுத்தினால் அனைத்தையும் நாம் நன்றாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

மனித படைப்பு என்பது மிகவும் ஒரு அற்புதமான படைப்பு. இந்த மனிதப்படைப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்தினால் நீங்கள் இந்த மனிதப்பிறப்பை எடுத்ததின் நோக்கம் நிறைவேறும்.

நம்பினால் நம்புங்கள்...

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

2 comments:

md said...

Sir,
nalama,
manidha piraviyin nokathai neram kidaikum pozthu virivaga solavum.

Nandri
Harish.

nallur parames said...

Sevvaai kirakathukku poneengala?ange ethavathu uyirinam irukka iruntha namma vinjyanikalukku sollunga.