Followers

Friday, August 8, 2014

புதன் என்கிற புத்திசாலி


வணக்கம் நண்பர்களே!
                    எனது தொழில் நண்பர்களை சந்திக்கும்பொழுது அவர்கள் என்னிடம் நீங்கள் முதலில் இவர்களை நல்ல புத்திசாலியாக மாற்றுங்கள் அதன் பிறகு அனைத்தையும் சொல்லிக்கொடுங்கள் என்று என்னிடம் சொல்லுவார்கள்.

நான் அனைவரிடமும் நல்ல புத்தசாலியாக இருங்கள் என்று சொல்லுவது உண்டு. நமக்கு நல்ல அறிவு மட்டும் கிடைத்துவிட்டால் போதும். நல்ல அறிவை தேடித்தான் அனைவரும் சென்றுக்கொண்டு இருக்கிறார். இந்த புத்தி மட்டும் கிடைத்துவிட்டால் அவர்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைத்துவிடும்.

நான் உங்களுக்கு செல்வவளம் தருவதற்க்கு வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிப்பட்டு வாருங்கள் என்று சொல்லிருந்தேன். எனது நண்பர் சொன்னார் நமது மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்தால் அதனை என்ன செய்வது என்றே தெரியாது. முதலில் அவர்களுக்கு புத்தியை கொடுங்கள் என்று சொன்னார்.

நல்ல புத்தி வேண்டும் என்றால் முதலில் நீங்கள் புதன் கிரகத்தை தான் பிடிக்கவேண்டும். புதன் மட்டும் மனசு வைத்தால் நீங்கள் மிகப்பெரிய புத்திசாலி.

புதன்கிரகத்தை மட்டும் தான் நாம் பிடிக்கவேண்டும் என்பதில்லை நமக்கு எந்த தெய்வமாக இருந்தாலும் ஏன் குலதெய்வமாக இருந்தாலும் புதன்கிழமை அன்று வழிப்பட்டால் நமக்கு சிறந்த புத்தியை கொடுத்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: