Followers

Saturday, August 30, 2014

நீண்ட நாள்கள் வாழவேண்டுமா?


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனுக்கும் நீண்ட நாள்கள் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்க்காக பல வழிகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். நிறைய வழிகள் இருந்தாலும் நான் சொல்லும் இந்த வழியை பின்பற்றி வாருங்கள். கண்டிப்பாக நீங்கள் நீண்ட நாட்கள் இந்த பூமியில் வாழலாம்.

சனிக்கிரகம் நமது ஆயுளை தரும் கிரகம். சனிக்கிரகத்தை கண்டு நாம் பயந்துக்கொண்டு இருக்கிறோம். அவரை நாம் மனதார எனக்கு நல்ல ஆயுளை தரவேண்டும் என்று கேட்கவேண்டும்.

முதலில் அவருக்கு நன்றியை சொல்லவேண்டும். இந்த பூமிக்கு என்னை கொண்டு வந்து இந்த உடம்பில் ஆத்மாவை பத்திரமாக வைத்திருப்பதற்க்கு நன்றி சொல்லவேண்டும்.

ஒவ்வொரு கிழமையும் கடவுளுக்கு கொடுத்த ஒரு அற்புதம் என்று தான் சொல்லவேண்டும். அதனை பயன்படுத்தும்பொழுது மட்டுமே அதனால் என்ன பயன் கிடைக்கிறது என்று நமக்கு தெரியும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயை உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். ஆயுள் முழுவதும் இதனை செய்து வரவேண்டும். கண்டிப்பாக உங்களுக்கு எந்த நோயும் வராது. நீண்ட ஆயுள் கிடைக்கும். நல்லெண்ணெய் என்றால் எள்ளில் இருந்து எடுக்கும் எண்ணெய்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

5 comments:

Unknown said...

சனி கிழமை பிறந்தவா்கள் சனி கிழமை எண்ணய் தேய்து குளிக்களாம சாா்

KJ said...

Sir, thanks for the info.

rajeshsubbu said...

வணக்கம் நண்பரே தாராளமாக குளிக்கலாம். நன்றி

rajeshsubbu said...

வாருங்கள் KJ என்ன ஆளை காணோம் என்று நினைத்து இருந்தேன். நலமா?

rajeshsubbu said...

வாருங்கள் KJ என்ன ஆளை காணோம் என்று நினைத்து இருந்தேன். நலமா?