Followers

Thursday, August 28, 2014

மகான்களின் சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு உங்களின் பிரச்சினையை தீர்க்கிறான் என்றால் அவன் சாதாரணமான ஆளாக இருக்கமுடியாது. கண்டிப்பாக அவன் மகானாக தான் இருப்பான். 

இந்தியாவில் அமர்ந்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு ஒரு பிரச்சினையை தீர்ப்பது என்பது சாதாரணமான ஒரு வேலை கிடையாது. மிகப்பெரிய அளவில் சக்தி இருக்கவேண்டும். அப்பொழுது தான் அது சாத்தியப்படும்.

இப்படிப்பட்டவர்கள் நீங்கள் வாழ்நாளில் பார்த்தால் அவரோடு நீங்கள் பழக்கம் ஏற்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. ஏன் என்றால் பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும். நாமும் சக்தியோடு இருக்கலாம்.

ஒரு சில மகான்களை நாம் தரிசிக்கும்பொழுது நமக்கு அளவுக்கு அதிகமான சக்தி கிடைக்கும். அந்த சக்தியால் நமது கர்மவினை தொலைந்து நல்ல வாழ்க்கையை நாம் வாழலாம்.

இப்படிப்பட்ட மகான்களை கண்டிப்பாக நீங்கள் சந்தித்து இருப்பீர்கள் அல்லவா. அவர்களிடம் இருந்து ஏதாவது ஒன்றை நீங்கள் பெற்று இருப்பீர்கள் அதனை நீங்கள் தக்கவைத்துக்கொண்டால் தொடர்ந்து அந்த மகான் உங்களுக்கு நல்லதை செய்துக்கொண்டே இருப்பார். தக்கவைத்துக்கொள்வது என்றால் அவரிடம் நாம் சரணாகதி அடையவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: