Followers

Tuesday, August 26, 2014

தவிர்ப்போம்


வணக்கம் நண்பர்களே!
                    நம்மில் பல பேர் செல்போனில் மந்திரங்களை டீயூனாக வைத்திருக்கிறார்கள். அது தவறான ஒன்று. ஏன் என்றால் மந்திரங்கள் ஒரு வித நல்ல சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்ட இடத்திலும் அதனை பயன்படுத்தகூடாது.

நாம் எந்த இடத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தினமும் கணித்துக்கொண்டு இருக்கமுடியாது. இறைவனின் மந்திரங்களை நல்ல சூழ்நிலையில் ஒலிக்கும்பொழுது மட்டுமே நல்ல விசங்களை அது பெற்று தரும். தவறான இடத்தில் அது ஒலிக்கும்பொழுது அது உங்களுக்கு பிரச்சினையை கொடுத்துவிடும்.

நாம் இந்து மதம் என்று சொல்லிக்கொள்ள செல்போன் காலர் டியூன் தேவையில்லை. நமது மந்திரங்களில் மிகப்பெரிய விசயங்கள் அடங்கியிருக்கின்றன. அந்த மந்திரங்கள் ஒலித்தவுடன் நீங்கள் மிகப்பெரிய பிரபஞ்ச சக்தியோடு தொடர்புக்கொள்வது போல் தான் நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் அதனை கண்ட இடங்களில் ஒலிக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை வரும்.

இனிமேல் அப்படி வைத்துக்கொள்ளவேண்டாம். மந்திரங்களை நீங்கள் பூஜையறையில் இருக்கும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது நல்ல சூழ்நிலை அமையும் தருணத்தில் அதனை பயன்படுத்திக்கொண்டால் பிரபஞ்சசக்தி உங்களை மிகப்பெரிய அளவில் உயர்த்தும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: