Followers

Thursday, August 7, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் நிறைய பேர் கேட்கும் கேள்வி ஒவ்வொரு பிரச்சினையாக சொல்லி எந்த கோவிலுக்கு சென்றால் இந்த பிரச்சினை தீரும் என்று கேட்பார்கள்.

நான் எந்த கோவிலுக்கும் செல்ல சொல்லுவதில்லை. நானும் சென்றதில்லை. எனக்கு தெரிந்த ஒரு சில கோவில்களுக்கு மட்டும் நான் சென்று வந்து இருக்கிறேன். மற்றபடி எந்த கோவிலுக்களுக்கும் செல்வதில்லை. 

சோதிடர்கள் சொல்லும் கோவில்கள் எல்லாம் எந்த அளவுக்கு பயன் தரும் என்பது எனக்கு தெரியாது. அதனால் அவர்களின் விருப்பபட்ட கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வாருங்கள்.

மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினையை அவனே அவனின் ஊரில் உள்ள கோவில்கள் அல்லது அவனே தீர்த்துக்கொள்ளமுடியும் என்று நினைப்பவன் நான். தன்னை அறிந்தால் போதும் அனைத்தையும் ஒருவன் பெற்றுவிடமுடியும் என்று உறுதியாக நம்புவன். நீங்களே உங்களை தயார்படுத்தி பிரச்சினையை தீர்க்க வழியை பாருங்கள்.

உங்களுக்குள் தேடுதல் நடைபெறும்பொழுது அனைத்தையும் நீங்களே கண்டுபிடித்து அறிந்துக்கொள்ளமுடியும். உங்களுக்குள் தேடுதலை ஆரம்பியுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: