Followers

Thursday, August 28, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      நிறைய நண்பர்கள் சித்தர்களைப் பற்றி எழுதினீர்கள் தற்பொழுது அதனைப்பற்றி எழுதவில்லை என்று கேட்டார்கள்.

சித்தர்களைப்பற்றி எல்லாம் சொல்லலாம் ஆனால் ஒரு சில விசயங்கள் ரகசியமாக இருக்கவேண்டும் அதனை போதிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே நாம் சொல்லமுடியும். அதனை பொதுவில் எழுதினால் அதனால் நமக்கு பிரச்சினை என்பதால் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

சித்தர்களைப்பற்றி நிறைய பதிவுகளை நண்பர்கள் எழுதுவார்கள். கொஞ்ச காலத்திலேயே அந்த பதிவுகள் அனைத்தும் நின்றுவிடும் காரணம் அவர்களுக்கு தெரியாமலே சித்தர்கள் அதனை நிறுத்திவிடுவார்கள்.

நமக்கு தெரியாமல் புத்தகங்களை படித்துவிட்டு இதனை எழுதினால் நமக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்று விளையாட்டாக ஆரம்பித்தாலும் அது வினையில் சென்றுமுடியும்.

சித்தர்களை பற்றி அறிவதற்க்கு உங்களிடம் எண்ணம் இருந்தாலே போதும். சித்தர்களைப்பற்றி அறிய உங்களுக்கு சித்தர்களே வழிகாட்டுவார்கள். சித்தர்களைப்பற்றி நாம் எழுதவேண்டியதில்லை.

உங்களிடம் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஜாதககதம்பத்தில் ஐந்து சதவீத கருத்தை மட்டுமே என்னால் சொல்லமுடியும். மீதியை வெளியில் சொல்லுவதற்க்கு என்னால் முடியாது. அது ரகசியமாக தான் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: