Followers

Friday, August 22, 2014

ஆன்மீகமும் தஞ்சாவூர் மாவட்டமும்


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டால் நீங்கள் செல்ல வேண்டிய முதல் ஊர் தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் சென்று தங்கிக்கொள்ளுங்கள். அதன் பின் ஒவ்வொரு ஊருக்காக சென்று இருக்கின்ற கோவில்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வாருங்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் பார்த்தால் தான் உங்களுக்குள் ஒரு திருப்தி கிடைக்கும். அனைத்து கோவில்களையும் தரிசனம் செய்யும்பொழுது உங்களுக்கு ஒரு வித பரவசம் கிடைக்கும். 

கோவில்களை பார்க்கும்பொழுது அது எப்பொழுது கட்டப்பட்டது. அந்த கோவிலின் சிறப்பு பற்றியும் நன்றாக அறிந்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவும். அதே நேரத்தில் பல தெய்வங்களின் பெயரை மட்டும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அந்த தெய்வங்களின் சிலையை பார்த்து இருக்க மாட்டீர்கள். அனைத்து தெய்வங்களின் சிலையை பார்க்கவேண்டும் என்றாலும் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.

ஒரு வாரக்காலம் தங்கி ஒவ்வொரு கோவிலாக பார்த்துவிட்டு வாருங்கள். ஒரு வாரக்காலம் கூட பற்றாது என்று தான் தோன்றுகிறது. ஏகாப்பட்ட கோவில்கள் இருக்கின்றன. நீங்கள் கண்டிப்பாக போகவேண்டிய இடம் தஞ்சாவூர் மாவட்டம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: