Followers

Thursday, August 7, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    பெண்களை மதிக்கவேண்டும் என்று நான் எழுதியதை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னிடம் சார் நீங்கள் மதிக்க சொல்லுகிறீர்கள் நாங்கள் மதிக்கிறோம் ஆனால் பெண்களை ஆண்களை அடிமையாக மாற்ற முயல்கிறார்கள் இதற்கு உங்களின் பதில் என்ன என்று கேட்டார்கள்.

அடிமையாக மாற்ற முயற்சிக்க வைப்பதை ஆண்களின் தவறான வழிகாட்டுதல் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஒவ்வொரு தந்தையும் தன் பெண்ணை வளர்ப்பதில் ஒரு சில தவறு செய்கிறார்கள். அந்த தவறு ஆண்களை அடிமையாக்க முயல்கிறார்கள்.

அதிக பாசம் கொடுத்துவிடுகிறார்கள். அந்த பாசத்தால் வரும் விளைவு இது. இப்பொழுது பல இடங்களில் பெண்ணின் பெற்றோர்கள் பையன்களை தன் பக்கம் இழுத்து செல்ல வழி வகுக்கிறார்கள். தனியாக வாழவேண்டும் அல்லது எங்களின் பேச்சை கேட்டு வாழவேண்டும் என்று நினைப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

பெற்றோர்கள் ஒரு சில வயதிற்க்கு பிறகு அவர்களை இந்த உலகத்தில் தனியாக தான் நீ போராடவேண்டும் என்று சொல்லி வளர்த்தால் நன்றாக இருக்கும்.

உலகவிசயங்களை எடுத்து சொல்லி இப்படி தான் நீ வாழவேண்டும் என்று சொன்னால் கேட்டுக்கொள்வார்கள். அதன் பிறகு நீங்கள் சக்தியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: