Followers

Sunday, August 3, 2014

சூரியன்+ராகு


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு கிராமத்திற்க்கு சோதிடம் பார்க்க சென்று இருந்தேன். அப்பொழுது ஒரு வீட்டில் ஒரு பெண்ணிற்க்கு திருமணம் நடைபெறவில்லை என்று ஜாதகத்தை காண்பித்தார்கள். 

நான் அந்த ஜாதகத்தை வாங்கி பார்த்தேன். அந்த பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் நன்றாக இருக்கிறது. களத்திரம் நன்றாக இருந்தால் போதும் எப்படியும் திருமணம் நடைபெற்றுவிடும். ஏன் திருமணம் நடைபெறவில்லை என்று யோசித்துவிட்டு அனைத்து கிரகத்தையும் பார்த்துக்கொண்டு வந்தேன்.

நான் ஜாதகத்தை வாங்கியவுடன் உடனே சோதிட பலனை சொல்லிவிடமாட்டேன். பொறுமையாக அனைத்தையும் பார்த்துவிட்டு தான் பலனை சொல்லுவது வழக்கம். வாங்கிய உடன் பலனை சொல்லும் அளவுக்கு இன்று வரை நான் உயரவில்லை என்ற உண்மையை உங்களிடம் ஒத்துக்கொள்கிறேன்.

அந்த பெண்ணின் ஜாதகத்தை பார்த்த பொழுது சூரியனும் ராகுவும் சேர்ந்து அமர்ந்து இருந்தது. நான் இந்த பெண் எங்கு இருக்கிறார். இவரை பார்க்க முடியுமா என்று கேட்டேன்.

அவர்களும் உடனே அழைத்து வந்து காட்டினார்கள். அவர்கள் காட்டிய பிறகு தான் தெரிகிறது அந்த பெண்ணின் உடல் முழுவதும் கட்டியாக இருக்கிறது. சின்ன சின்ன கட்டிகளாக இருக்கிறது. அதாவது சூரியனும் ராகுவும் லக்கினத்தில் அமர்ந்து உள்ளதால் உடலில் உஷ்ணகட்டியை ஏற்படுத்தி அந்த பெண்ணிற்க்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

உடல் பிரச்சினையால் அந்த பெண்ணை யாரும் திருமணம் செய்ய வரவில்லை. பிறகு ஒரு பரிகாரத்தை செய்ய சொல்லிவிட்டு வந்தேன். ஆறு மாதத்திற்க்கு பிறகு கட்டி மறைந்து விட்டது. அதன் பிறகு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: