Followers

Friday, August 8, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று சக்தி என்ற பதிவில் எழுதிய விசயத்தை படித்துவிட்டு நிறைய சகோதரிகள் கையில் எதனை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சகோதர்கள் நிறைய பேர் என்னிடம் போன் செய்து ஏப்பா உனக்கு வேலை இல்லையா சும்மா எங்களை மாட்டிவிடுகிறாய் என்று கேட்டார்கள்.

அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக தான் அந்த பதிவை எழுதினேன். எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிடாது. இந்த மாதிரி தகவல்கள் உங்களுக்கு தரும்பொழுது இனிமேலாவது புரிந்துக்கொள்வீர்கள் என்பதற்க்காக தந்தேன்.

பொதுவாக நான் யார் வீட்டிற்க்கும் செல்லாதற்க்கு கூட இந்த மாதிரி காரணங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டிற்க்கு சென்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். 

நான் செல்வது கூட ஒருவருக்கு பிடிக்கும். இன்னோருவருக்கு பிடிக்காது இதனால் தான் பல பேர்களை நான் தவிர்த்து இருக்கிறேன்.ஒரு வீட்டிற்க்கு சென்று இருந்தேன். அந்த வீட்டில் உள்ள பெண் என்னை அழைத்து சென்று இருந்தார். அங்கு சென்ற பிறகு அவரின் கணவர் என்னை வரவேற்றாலும் அவரின் மனதில் இவனோடு இவளுக்கு என்ன தொடர்பு என்ற ரீதியில் மனதில் எண்ணம் உருவாகுகிறது. அந்த நாளில் இருந்து பெரும்பாலும் வீடுகளுக்கு செல்வதை தவிர்த்து வருகிறேன்.

கணவன் மனைவிக்குள் நல்ல அன்பை உருவாக்க தான் பல பதிவுகளில் நல்ல கருத்துக்களை எழுதி வருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து நல்ல முறையில் வாழ்க்கையை வாழுங்கள். என்னை புரிந்துக்கொள்வது மிக மிக கடினம்.  என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ள நீங்கள் ஞானியாக இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: