Followers

Sunday, August 3, 2014

ஆண்கள் மட்டும் படிக்கவும்


வணக்கம் நண்பர்களே!
                    ஆண்கள் என்ன தான் நான் ஆம்பிளை என்று காலரை தூக்கிக்கொண்டாலும் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் தான் இருக்கிறாள்.

வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெறபோகிறவர்கள் அனைவருக்கும் பின்னாடி பெண்கள் தான் இருப்பார்கள். இது உலகத்தின் நீதி. நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் முதலில் உங்களின் மனைவி உங்களுக்கு உதவி புரிந்தால் மட்டுமே நீங்கள் வெற்றி பெறமுடியும். 

உங்களின் மனைவி உங்களுக்கு சக்தியை தருபவளாக தான் இருப்பாள். அந்த சக்தி எந்தளவுக்கு கிடைக்கிறதோ அந்தளவுக்கு நீங்கள் உயர்வீர்கள். இதனை முதலில் நீங்கள் நம்பி பெண்களை மதிக்கவேண்டும்.

பெண்களை சக்தி என்று அழைத்தர்க்கு காரணம் அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. உங்களை பெற்றதும் பெண் தான் என்பதை முதலில் நினைவில் வையுங்கள். முதல் சக்தியாக உங்களுக்கு தாய் இருக்கிறாள். பிறகு தாரம் சக்தி தருபவளாக இருக்கிறாள்.

உங்களின் மனைவியை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்கள் மனது நோகுவது போல் நடந்துக்கொள்ளாதீர்கள். ஏன் என்றால் உங்களை உருவாக்கும் சக்தியே உங்களை அழிக்கும் சக்தியாகவும் இருப்பாள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். ஆண்களிடம் ஒன்றுமே இல்லை என்று தான் நான் சொல்லுவேன். 

நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களின் தாய் மற்றும் தாரத்தை நன்றாக கவனிக்க தொடங்குங்கள். கண்டிப்பாக நீங்கள் வெற்றி பாதையில் செல்லமுடியும். நண்பா உடனே இதனை கடைபிடி முன்னேறிவிடுவாய்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Oru sila karuthu verupaadu varum thaane sir?