Followers

Tuesday, August 26, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    இன்று ஒரு நண்பர் பேசும்பொழுது என்னிடம் எங்களுக்கும் ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னார். அவரிடம் சொன்னதை உங்களிடம் சொல்லுகிறேன்.

உங்கள் அனைவருக்கும் சோதிடம் நன்றாக தெரியும். ஒவ்வொரு கிரகங்களும் உங்களுக்கு பிரச்சினையை தரும் நிலையில் தான் பெரும்பாலும் இருக்கும். கோச்சாரப்பலன்கள் கூட அதிகஅளவில் கெடுதல்களை செய்யுது கொண்டு தான் இருக்கும்.

ஒவ்வொரு கிரகங்களும் சுற்றிக்கொண்டே இருக்கும்பொழுது நமது கர்மவினையை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். கர்மவினை குறைப்பதற்க்கு தான் பரிகாரம் எல்லாம் இருக்கிறது. 

ஒரு ஆளுக்கு ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்று விட்டுவிட்டு இருந்தால் கொஞ்ச நாளில் மறுபடியும் பிரச்சினை வந்துக்கொண்டு இருக்கும். ஏன் என்றால் அடுத்த கிரகங்கள் தாக்க ஆரம்பித்துவிடும்.

உங்களுக்கே தெரியும் நாம் ஏழரை சனி மற்றும் ஏதாவது பாதிப்பை சொல்லி நமக்கு பிரச்சினை வரும் என்று சொல்லிக்கொண்டு இருப்பீர்கள் ஆனால் பெரிய அளவில் இருக்கும் பணக்காரர்களை பார்த்தால் அவர்கள் இதனை கண்டு பயம்கொள்ளாமல் இருப்பார்கள். வெளியிலும் காட்டிக்கொள்வதில்லை. அதற்கு காரணம் என்ன என்றால் அவர்களின் பின்பு நிறைய ஆன்மீகவாதிகள் இருக்கின்றார்கள்.

உங்களுக்கு நான் செய்ய தயாராக இருக்கிறேன் நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா என்று தான் எனது கேள்வி இருக்கும். குறைந்தது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறையாவது பூஜை செய்ய வேண்டும் அப்பொழுது தான் இந்த மாதிரி கிரகங்களின் பிரச்சினையில் இருந்து தப்பி உங்களின் வாழ்க்கை நன்றாக வாழ முடியும்.

என்னிடம் கூட வரவேண்டியதில்லை உங்களின் ஊர்க்கு அருகில் இருப்பவர்களிடம் சொல்லி அதற்கு பரிகாரம் செய்துக்கொள்வது நல்லது. அதனையும் செய்யமுடியவில்லை என்றால் நீங்களே ஆலயவழிபாடு செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: