Followers

Monday, September 15, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு நண்பரின் கேள்வி கிரகங்களை எதிர்த்து எப்படி எப்படி வழிபாடு செய்வது என்பது கேட்டார். 

பொதுவாக நானே கண்டுபிடித்த விசயமாக இருந்தால் உடனே பதிவில் சொல்லிவிடுவேன். எனக்கு கொடுத்த குருவின் வாக்கை மீறி எதுவும் செய்யமுடியாது. காலம்காலமாக இருந்து வரும் கோட்பாடு இது.

நமது மதத்தில் உள்ள விசயங்களில் மந்திரங்களை இப்படி தான் பாதுகாத்து வருகிறார்கள். ஒரு மந்திரத்தை அவ்வளவு எளிதில் அனைவரும் கற்றுக்கொள்ளமுடியாது. குரு அதனை கொடுத்து அதனை நீங்கள் பெற்று அதனை போற்றி பாதுகாத்து அதனை பயன்படுத்தவேண்டும்.

ஒரு மந்திரத்தை நான் குருவின் வாக்கை மீறி வெளியிட்டால் அந்த மந்திரத்தின் தன்னை அப்படியே வீணாக போய்விடும். அந்த மந்திரம் வேலை செய்யாது. அடி ஆழத்திற்க்கு சென்றுவிடும். 

ஒரு குரு ஒரு விசயத்தை கற்றுக்கொடுத்து இதனை வெளியில் சொல்லாதே என்று சொன்னால் கண்டிப்பாக அதனை நீங்கள் வெளியில் சொல்லிவிடாதீர்கள். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் உங்களுக்கும் உங்களின் குருவிற்க்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடும்.

நான் அனுபவித்த கருத்துகளை உங்களிடம் சொல்லிவிடுவேன். நீங்கள் அதனை தேடி ஒரு குருவிடம் கற்றுக்கொள்வது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: