Followers

Monday, September 15, 2014

கிரகங்களுக்கு துதி


வணக்கம் நண்பர்களே!
                      கிரகங்களை துதிப்பது சிறந்தது. நாம் கிரகங்களை எதிர்க்க வேண்டியதில்லை. அந்த கிரகத்தை நன்றாக துதி பாடினால் போதும் உங்களை அதிகம் தாக்காது.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு இருக்கும் அதில் கிரகங்களுக்கு துதிப்பது மிகவும் பிடிக்கும். ஒரு சோதிடர் எப்பொழுதும் கிரகங்களின் பெயரை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி சொல்லும்பொழுது அந்த கிரகங்கள் அவரின் சொல் பேச்சிற்க்கு தகுந்தவாறு வேலை செய்ய ஆரம்பிக்கும்.

சோதிடர்களின் வாக்கு பலிதம் என்பது இப்படி தான் கிடைக்கிறது. கிரகங்களின் பெயரை சொல்ல சொல்ல அது மந்திர உரு மாதிரி உரு ஏறுகிறது.அப்படி உரு ஏறும் மந்திரங்கள் அவரின் வாக்கு பலிதமாக மாறுகிறது.

நீங்கள் சனிக்கிரகத்தை கண்டு பயப்படுகிறீர்கள் உண்மையில் அதனை நீங்கள் வணங்கி பாருங்கள். அதனை துதித்து வணங்குங்கள். எனது உயிரை இந்த உடலில் வைத்திருப்பதற்க்கு நன்றி என்று வணங்குங்கள் சனிக்கிரகம் உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு கிரகமும் இப்படி தான் அதனை நாம் துதிக்க துதிக்க நமக்கு நல்லதை செய்ய ஆரம்பிக்கும். கிரகங்களை எதிர்த்து வேலை செய்வது என்பது மிகப்பெரிய கெட்டிக்காரன் செய்யும் வேலை அது. அதனால் நீங்கள் துதித்தே நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: