Followers

Thursday, September 18, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      எதனையும் ஒழுங்காக கற்றுக்கொள்ளாமல் அரைகுறையோடு எதையாவது சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. ஆன்மீகத்திலும் இது அப்படி தான் நடைபெறும். மாதத்திற்க்கு ஒரு முறை நான் பல நெட்டில் பல ஆன்மீக தளங்களை பார்வை இடுவேன். அப்படி பார்வை இடும்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தை வைத்து அன்றே அவர்களை நோட்டம் இட ஆரம்பித்துவிடுவேன்.

தமிழன் சும்மா எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பான். அதனைப்பற்றி தெரியவில்லை என்றாலும் எங்கையாவது இரவல் வாங்கியாவது அதனைப்பற்றி சல்லி அடிப்பான். நிறைய ஆன்மீகவாதிகள் இப்பொழுது என்னிடம் மாட்டி உள்ளனர். இவர்கள் இப்படி இருந்தால் மட்டுமே எனக்கு தொழில் நன்றாக நடக்கும்.

அந்த பூஜை செய்து தருகிறேன் இந்த பூஜை செய்து தருகிறேன் என்று சொல்லும் பல நல்ல ஆன்மீகவாதிகள் இப்பொழுது எனக்கு கிடைத்து உள்ளனர். அவர்கள் பூஜை செய்யும்பொழுது அப்படியே அந்த பூஜை எடுத்து எனது வேலைக்கு பயன்படுத்திக்கொள்வது எனக்கு கைவந்த கலை. 

அடுத்தவர்கள் செய்யும் பூஜையை எடுத்து தவறான காரியங்களுக்கு தான் பயன்படுத்தவோம். உங்களிடம் உண்மையை சொல்லுவதில் தவறு இல்லை. ஏன் என்றால் அவர்கள் மாதிரி நீங்கள் தவறு செய்யமாட்டீர்கள் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

பொதுவாக நான் நெட்டில் மட்டும் தேடுவது கிடையாது. ஏதாவது ஒரு சக்தியை அனுப்பி எங்கு என்ன நடக்கிறது என்று பார்தது வருவதற்க்கும் அனுப்பி வைப்பது வழக்கம். அப்படி பார்த்து அது தகவலை கொடுத்தவுடன் அவர்கள் செய்யும் பூஜை மீது குறி வைத்துவிடுவது உண்டு.

நீங்கள் எல்லாம் பயப்படதேவையில்லை நமது குறி நீங்கள் கிடையாது. நான் மட்டும் இப்படி செய்வது கிடையாது. எனக்கு தெரிந்த பல மலையாள நண்பர்கள் கூட இப்படி தான் செய்கிறார்கள்.

இந்த உலகத்தில் நல்லதே செய்தால் கூட அது அடுத்தவனுக்கு தெரியாமல் தான் செய்யவேண்டும். மாயஉலகம் இது. சரி நமது அம்மனுக்கு பூஜை செய்கிறோம் அதனை யாராவது எடுக்கமுடியுமா என்று கேட்க தோன்றும். அங்கு தான் எனது தொழிலின் ரகசியம் இருக்கிறது. அதனைப்பற்றி நினைக்ககூட விடமாட்டேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Naalu perukku nalladhuna ethuvum thappillai